என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TRAINING FOR TEACHERS"
- வேலைவாய்ப்புத் திறன் குறித்து விளக்கம்
- ஏராளமானோர் பங்கேற்றனர்
வேலூர்:
மேல்நிலை வகுப் புகளில் தொழிற்கல்வி பாடப் பிரி வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்புத் திறன் புதிய பாடம் தொடர்பாக, வேலூர் மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியர்க ளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூர் எஸ்எஸ்ஏ அலுவல கத்தில் நடைபெற்ற இந்தப் பயிற் சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட கருத்தாளர் கள் கே.பழனி, செ.நா.ஜனார்த்த னன், க.ராஜா, கா.பா.சிவஞானம், எம்.நாகலிங்கம், ரமேஷ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
முது நிலை ஆசிரியர்கள் ஜி.பூபதி, லீலா கிருஷ்ணன், கணினிப் பயிற்றுநர் மா.முருகன் ஆகியோர் பாடப் பொருள்கள் குறித்து விளக்கிப் பேசினர். தொழில்கல்வி மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தொழில் துறை களில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புத் திறன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மாநில திறன் மேம்பாட் டுக் கழகம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற தொடர்புடைய துறை திறன் கழகங்கள் மூலம் நடைமுறை மதிப்பீட்டுக்கான திறன் சான்றிதழ் ஒவ்வொரு மாணவருக்கும் வழங் கப்படும்.
தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் 2022-ஆம் கல்வி யாண்டிலிருந்து வேலைவாய்ப்பு களை உருவாக்குபவர்களாக உருவாக்குவதே இந்த பாடத்தின் அடிப்படை நோக்கம். இதன்மூலம், மாண வர்கள் தங்களின் பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்களை அடையாளம் காண முடியும்.
மாணவர்கள் ஆங்கில மொழித் திறன், தகவல் தொடர்புத் திறன், கணினி தகவல் தொடர்பு, தொழில் முனைவோர் திறன், 21-ஆம் நூற்றாண்டுத் திறன்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வர் என்றும் தெரி விக்கப்பட்டது.
முன்னதாக, உதவித் திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம் வரவேற்றார். ப் உதவியாளர் கோபி நன்றி கூறினார்.
- 1 முதல் 10-ம் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- உடல்நலம், மனநலம் பற்றி விளக்கப்பட்டது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி குறுவள மையத்தில் நேற்று 18-ந்தேதி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமையில் நடந்த பயிற்சி முகாமில் ஆசிரியப்பயிற்றுநர் ராமச்சந்திரமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் சாவித்திரி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் 40 பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் இமிஸ், உடல்நலம் மனநலம் பற்றி விளக்கப்பட்டது. அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.
- தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
- முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி துவங்கியது.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில்,
அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன்படி பெரம்பலூர் ஒன்றியத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு எசனை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்திற்கு குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
ஆலத்தூர் ஒன்றியத்திற்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த பயிற்சி 5 நாட்கள் நடைபெறுகிறது என தெரிவித்தார். இந்த பயிற்சியில் இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 3ம்வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 551 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்