search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
    X

    கோப்பு படம்

    வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்டது வைகை அணை
    • திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் . வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதன் பின்பு மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. 67 அடி வரை இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 60.27 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3653 மி.கனஅடி யாக உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.75 அடி, வரத்து 137 கனஅடி, திறப்பு 400 கனஅடி, இருப்பு 5107 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.40 அடி, வரத்து 23 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 86.92 அடி, திறப்பு 3 கனஅடி.

    Next Story
    ×