search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்து தப்பிய கொள்ளையர்கள்
    X

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்து தப்பிய கொள்ளையர்கள்

    • வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்து கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
    • இதுகுறித்து மணிகண்டம் போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கின்றனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த மணிகண்டம் வாட்ஸ் நகர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி நல்லம்மாள் (வயது 77). இவர் தனது மருமகளுடன் அந்தப் பகு–தியில் வசித்து வந்தார்.இதற்கிடையே மருமகள் ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப் போது 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.

    உடனே மூதாட்டி நல்லம் மாள் வாங்க..., வாங்க.... உள்ளே வந்து உட்காருங்க என கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து மர்ம நபர் கள் இருவரும் இரு நாற்காலி–களில் போய் அமர்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மூதாட்டி இடம் உறவினர்கள் போல நலம் விசாரித்து பேசினர்.மேலும் மதிய உணவை உங்கள் வீட்டில் சாப்பிட விரும்புவதாகவும் உரிமை–யோடு தெரிவித்து உள்ள–னர். உடனே மூதாட்டியும் விதவிதமாக மதிய உண–வுகளை தயார் செய்ய தொடங்கினார்.

    அப்போது அந்த மர்ம நபரில் ஒருவர், தாங்கள் அணிந்திருக்கும் செயின் நல்ல டிசைனாக இருக்கிறது. எந்த நகைக்கடையில் செய்து வாங்கினீர்கள் என கேட்டார். மேலும் அந்தச் செயினை ஒரு முறை பார்க்கலாமா? எனவும் கேட்டுள்ளனர்.உடனே நல்லம்மாள் தனது செயினை கழற்றி அவர்கள் கையில் கொடுத்துவிட்டு உணவு எடுப்பதற்காக சமையல் அறைக்குச் சென்றார். பின்னர் இருவருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு திரும்பிய போது அந்த மர்ம ஆசாமிகள் அந்த ரெண்டேகால் பவுன் செயினை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பறந்து விட்டனர்.

    ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கதறி அழுதார். பின்னர் உடனடியாக மரு–மகளுக்கு செல்போனில் நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். பின் னர் இது தொடர்பாக மணிகண்டம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில மணிகண்டம் போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கின்றனர்.திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக நடித்து மூதாட்டியின் செயினை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப–டுத்தி உள்ளது.


    Next Story
    ×