என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சமயபுரம் வியாபாரியை கடத்தி 30 பவுன் நகை பறிப்பு
- போலீஸ் போல் நடித்து திருச்சி சமயபுரம் வியாபாரியை கடத்தி 30 பவுன் நகை பறிப்பு
- விமான நிலையம் அருகே துணிகர சம்பவம்
திருச்சி,
திருச்சி சமயபுரம், ரகுபதி காலனியை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (வயது 47). வியாபாரியான இவர் திருச்சியில் இருந்து கோவை சென்றுள்ளார். அங்கு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கோவை வந்த நண்பர் ஒருவரிடம் இருந்து 6 தங்க சங்கிலிகள் என மொத்தம் 30 பவுன் நகைகள் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.அப்துல் ரசாக் அந்த பார்சலுடன் விமானநிலையம் அருகே இரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போலீஸ் உடையில் வந்த 3 பேர் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காரில் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.இதனால் அப்துல்ரசாக் அவர்களுடன் காரில் ஏறினார். கார் கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்றது. அப்போது போலீஸ் உடையில் இருந்த 3 பேரும் அவரிடம் இருந்த பார்சலை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பார்சலை கொடுக்க மறுத்துள்ளார்.அப்போது அவர்கள்கொலை செய்து விடுவதாக மிரட்டி, 30 பவுன் தங்க நகைகள் உள்ள பார்சலை பறித்துக்கொண்டனர். பின்னர் அப்துல் ரசாக்கை கொச்சி-சேலம் சாலையில் காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர்.இதனால் செய்வது அறியாமல் திகைத்து நின்ற அப்துல்ரசாக் நடந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விமான நிலைய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அப்துல் ரசாக் தங்க நகை பார்சலை கொண்டு வருவதை நோட்டமிட்டு, 3 பேர் கும்பல் இந்த கைவரிசை காட்டியுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்