search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு முகாம் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய கோரி கலெடக்டர் அலுவலகத்தில் மனு
    X

    சிறப்பு முகாம் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய கோரி கலெடக்டர் அலுவலகத்தில் மனு

    • சிறப்பு முகாமில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய கோரி கலெடக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    • உறவினர்கள் அளித்தனர்

    திருச்சி:

    தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். அந்தவகையில் இலங்கை, நைஜீரியா, பல்வேரியா, வங்கதேசம், இந்தோனீசியா உட்பட வெளிநாட்டினர் என மொத்தம் சுமார் 150 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.

    இவர்களை விடுதலை செய்யக்கோரி, அவர்களின் உறவினர்கள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர்அ வர்கள் கூறியதாவது;இலங்கை நைஜீரியா பல்வேறு பகுதிகளிலிருந்து எங்களின் உறவினர்கள் தமிழகத்திற்கு வேலை தேடி வந்த பொழுது ஏதாவது ஒரு சிறிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த தவறுக்காக தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறப்பு முகாம்களில் அவர்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள்.

    முகாமில் உள்ள எங்களின் உறவினர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் குடும்பத்தோடு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ தீக்குளித்து எங்களுடைய உயிரை மாய்த்து விடுவோம் என்று கண்ணீரோடு தெரிவித்தனர்.

    Next Story
    ×