search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
    X

    திருச்சி கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

    • கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை சார்பாக 2 நாட்கள் தேசிய அளவிலான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் முனைவர் சீனிவாசன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

    திருச்சி,

    திருச்சி சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை சார்பாக 2 நாட்கள் தேசிய அளவிலான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான எம்பெட்டட், வி.எல்.எஸ்.ஐ, ஆண்டனா ஆகிய தலைப்புகளில் செயல்வழி கற்றல் நிகழ்வுகள் முதல் நாளிலும், 2ம் நாள் ஆய்வறிக்கை சமர்பித்தல், வினாடி வினா, கனெக்ஷன்ஸ் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

    நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி முதல்வர் முனைவர் சீனிவாசன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

    இதில் துறை தலைவர் முனைவர் மகேஸ்வரி மற்றும் உதவி பேராசிரியர்கள் முனைவர்சதிஷ் லிங்கம், விக்னேஸ்வரன், சையது உசைன், ஜானுப்பிரியா, பாலகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×