search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா கடத்திய பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    X

    கஞ்சா கடத்திய பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    • கலெக்டர் பிரதீப் குமார், கஞ்சா வழக்கில் கைதான கோமதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
    • போலீசார் கோமதியை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன். இவரது மனைவி கோமதி (வயது 52). இவர் சமீபத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் ராம்ஜி நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் அவரை மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த காரணத்தால் கோமதியை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரதீப் குமார்,கஞ்சா வழக்கில் கைதான கோமதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.


    Next Story
    ×