search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமயபுரம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்
    X

    சமயபுரம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்

    • திருச்சி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் மேலவாளாடி மேம்பாலம் பகுதியில் ரோந்து சென்றார்
    • போலீசார் தங்களை நெருங்குவதை கண்ட மணல் கடத்தல் காரர்கள் மூன்று பேரும் மாட்டு வண்டியை நடுரோட்டில் போட்டுவிட்டு குதித்து தப்பி ஓடினர்.

    திருச்சி :

    திருச்சி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் மேலவாளாடி மேம்பாலம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது லால்குடி மேல வாளாடி பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர்( வயது 42) ஆனந்த் (25) மற்றும் பெயர் விவரம் தெரியாத இன்னொரு நபர் என 3 பேர் சேர்ந்து மாட்டு வண்டியில் மணலை கடத்திக் கொண்டு சென்றனர். இதனைப் பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைக்க முற்பட்டனர்.

    போலீசார் தங்களை நெருங்குவதை கண்ட மணல் கடத்தல் காரர்கள் மூன்று பேரும் மாட்டு வண்டியை நடுரோட்டில் போட்டுவிட்டு குதித்து தப்பி ஓடினர். பின்னர் போலீசார் மாட்டு வண்டி மற்றும் மணலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×