என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கர்ப்பிணி உள்பட 6 பெண்கள் மாயம் கர்ப்பிணி உள்பட 6 பெண்கள் மாயம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/02/1875082-missing-1.webp)
கர்ப்பிணி உள்பட 6 பெண்கள் மாயம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருச்சியில் பல்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி, கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 6 பெண்கள் மாயமாகினர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
திருச்சி,
திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாமுனி மகள் நந்தினி (வயது 18) .இவர் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நந்தினி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.இந்த நிலையில் நந்தினி அவரது தாயார் மாலதிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற வாலிபரை தான் திருமணம் செய்து கொண்டதாகவும், இனிமேல் தன்னைத் தேடவேண்டாம் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் மாலதி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கே.கே.நகர் பகுதியில் 18 வயது இளம் பெண் ஒருவர் மாயமானார். திருச்சி பர்மா காலனி கவிபாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் காட்டு ராஜா. இவரது மகள் தமிழ்ச்செல்வி (18 ). இவர் காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். அங்கேயே தங்கி இருந்த அவர் கடந்த 28-ந்தேதி திருச்சிக்கு செல்வதாக தனது சகோதரியிடம் கூறிச் சென்றார். ஆனால் திருச்சிக்கு அவர் வந்தடையவில்லை.
இதுகுறித்து தாயார் புஷ்பம் கே.கே நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தானாகவே எங்கேனும் சென்றாரா அல்லது யாராவது மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில் ஒரு இளம் பெண் மாயமானார். ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் அபிநயா (23). இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் வீட்டிலிருந்து அபிநயா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் வைஜெயந்தி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார் போலீசார் அபிநயாவை தேடி வருகின்றனர்.
இதேபோல் தில்லை நகர் காவல் நிலைய பகுதியில் ஒரு சிறுமி மாயமானார். திருச்சி சங்கிலிகண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி மளிகை கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெரு எழில் நகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மனைவி பானு என்கிற சமீம் பானு மாயகியுள்ளார். இவர் சமீப காலமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமாகி விட்டார்.
காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் மாயமாகியுள்ளார். பாலக்கரை ஆழ்வார் தோப்பு முருகன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா. அவரது மனைவி மகபூ நிஷா. இந்த தம்பதிகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது நான்கு மாத கர்பிணியாக இருக்கும் மகபூ நிஷா அருகிலுள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் அடுத்தடுத்து 6 பெண்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)