search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 48,528 பேருக்கு கொரோனா தடுப்பூசி
    X

    திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 48,528 பேருக்கு கொரோனா தடுப்பூசி

    • திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 48,528 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • 35-வது சுற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

    திருச்சி

    தமிழகத்தில் 35-வது சுற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 1,820 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் நடைபெற்ற இந்த முகாம்களில் மாவட்டம் முழுவதும் 48 ஆயிரத்து 528 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் கோவிஷீல்டு முதல் தவணை ஆயிரத்து 865 பேரும், 2-வது தவணை 9 ஆயிரத்து 18 பேரும், பூஸ்டர் டோஸ் 3 ஆயிரத்து 216 பேரும் செலுத்தினர். கோவாக்ஸின் முதல் தவணை 306 பேரும், இரண்டாவது தவணை ஆயிரத்து 503 பேரும், பூஸ்டர் டோஸ் 2 ஆயிரத்து 920 பேரும் செலுத்திக்கொண்டனர்.

    Next Story
    ×