search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
    X

    நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்


    கொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

    கோடை விழா முடிந்தபின்னரும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது

    கொடைக்கானல் :

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத்து சீராக இருந்தது.

    இந்நிலையில் கோடை விழாவை கொண்டாடுவதற்காக பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்த நிலையில் வார விடுமுறையை கொண்டாடுவதற்காக மீண்டும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர்.

    இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் இயற்கை காட்சிகளை காண்பதற்காக செல்லக்கூடிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் பல மணி நேரம் சுற்றுலாப்பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

    கோடைகாலம் ஆரம்பித்ததிலிருந்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குளு குளு காலநிலையை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தும் ஏரியில் படகு சவாரி செய்தும் பிரையண்ட்பூங்காவில் மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பள்ளிகள் திறக்கும் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×