என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.
    • அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது.

    இந்த வரிசையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் "மை லார்ட்" திரைப்படம் இன்று (பிப். 13) வெளியானது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.

    மை லார்ட் வெளியீட்டை ஒட்டி நடிகர் சசிகுமார், சைத்ரா ஆகியோர் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    • த.வெ.க. மாவட்ட செயலாளர் உதயகுமார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் அவர்களை தடுத்தும், விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட த.வெ.க.செயலாளராக பணிபுரிந்து வருபவர் உதயகுமார். வந்தவாசியில் நடந்த விழாவில் ஐந்து கண் பாலம் அருகே இருந்து த.வெ.க. நிர்வாகிகள் திடீரென கிரேன் மூலம் மாவட்ட செயலாளருக்கு மாலை அணிவித்தும் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆரன் அடித்துக் கொண்டும் அலப்பறையில் ஈடுபட்டனர்.

    மேலும் த.வெ.க. மாவட்ட செயலாளர் உதயகுமார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும் த.வெ.க. நிர்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்தும், விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற த.வெ.க. மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மாவட்டச் செயலாளருக்கு மாலை அணிவிக்க பயன்படுத்தப்பட்ட கிரேனை பறிமுதல் செய்தனர்.

    • அண்ணாமலையார் கோவிலில் வாஷிங்டன் சுந்தர் சாமி தரிசனம் செய்தார்.
    • வாஷிங்டன் சுந்தரை கண்ட பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 20 ஓவர் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பையில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார்.

    இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வாஷிங்டன் சுந்தர் சாமி தரிசனம் செய்தார்.

    வாஷிங்டன் சுந்தரை கண்ட பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    • இனி நடிக்க மாட்டேன் என கூறியது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது
    • ஒரு கலைஞர் தனது படம் கடைசி என்று கூறக்கூடாது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவரும், நடிகையுமான குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தேர்தல் பிரசாரம் மேற்கொள்வீர்களா?

    பதில்: இன்னும் நேரம் உள்ளது. கண்டிப்பாக பிரசாரம் மேற்கொள்வேன்.

    கேள்வி:- சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    பதில்: தலைமை அறிவித்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    கேள்வி:- தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்: பீகாரில் பா.ஜ.க. தனித்து வெற்றி பெற்று ஆட்சி பிடித்ததுபோல், தமிழகத்திலும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.

    கேள்வி:- ஆட்சியில் பா.ஜ.க. பங்கேற்குமா?

    பதில்: பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தமிழக தேர்தல் பார்வையாளர் ஆகியோர் முடிவு செய்வார்கள்.

    கேள்வி:- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பா.ஜ.க. அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு என்ன பொருள்?

    பதில்: அவரது கூட்டத்தில் பேசியதை நானும் கேட்டேன். என்ன அழுத்தம் என்று எனக்கு புரியவில்லை. அவர் திரைப்படத்தில் இனி நடிக்க மாட்டேன் என கூறியது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு கலைஞர் தனது படம் கடைசி என்று கூறக்கூடாது.

    கேள்வி:- தேசிய திரைப்பட விருதும், தமிழக திரைப்பட விருதும் தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: என்ன என்று அவரைத்தான் கேட்க வேண்டும் எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

    • கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 3-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4.43 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    இந்த நேரத்தில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

    • தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படக் கூடிய துரோகிகள்.
    • பா.ஜ.க. ஆதரவாளர்களே ஒன்றிய அரசை கழுவி ஊற்றுகிறார்கள்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.30 கோடி பெண்கள் மாதம் ரூ.1000 பெறுகின்றனர். விடியல் பயணம் திட்டத்தின் மூலம் 900 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த நாடே திரும்பி பார்க்கக் கூடிய வளர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கிறோம்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்கு தரவேண்டிய நிதியை தரவில்லை. குடைச்சல் கொடுப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டிக்கக்கூடிய ஆளுநர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படக் கூடிய துரோகிகள். அந்த துரோகிகளுக்கு அடிமை சாசனம் எழுதி தந்து சரணாகதி அடைந்த அடிமைகள் என்று அனைத்தையும் முறியடித்து நாம் முன்னேறி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல்.

    இந்த வளர்ச்சிதான் பலரது கண்களை கூச செய்கிறது. வயிறு எரிகிறது, அதனால்தான் தமிழ் நாட்டுக்கு எப்படியாவது அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். பொறுப்புள்ள ஒன்றிய அமைச்சர், பொறுப்பில் இருப்பவர்கள் கூட வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள். தமிழ் நாட்டில் வெறுப்புணர்ச்சியை பரப்பினால் அதன் மூலமாக வடமாநிலங்களில் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கிறார்கள்.

    ஆனால் அவர்கள் நினைப்பது நடப்பதில்லை. தமிழ்நாட்டை பற்றி இப்படி பேசுகிறார்களே என்று வடமாநில யூடியூபர்கள் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். பா.ஜ.க. ஆதரவாளர்களே ஒன்றிய அரசை கழுவி ஊற்றுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வந்த 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு மொத்தமாக நீக்கி விட்டது.

    இதை எதிர்த்து பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நாம் தான் போராடிக் கொண்டு இருக்கிறோம். தன்னை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதை எதிர்த்து குரல் கொடுக்க துணிச்சல் இல்லாமல் ஆதரித்து பேசுகிறார். இதற்கு ஆதரவாக அ.தி.மு.க. மாநிலங்களவையில் வாக்களித்து இருக்கிறது.

    ஒன்றிய பா.ஜ.க.வின் ஆட்சியாளர்களும், அ.தி.மு.க. அடிமைகளும் நம் அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள். அவர்களின் எந்த பொய்யையும் மக்களான நீங்கள் ஏற்க தயாராக இல்லை. அதனால்தான் திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி என்று நான் உரக்க சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டின் மீது வெறுப்பை பரப்பினால் வடமாநிலங்களில் ஓட்டு கிடைக்கும் என பா.ஜ.க. நம்புகிறது.
    • 100 நாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பது திருவண்ணாமலை மக்களுக்கு நன்கு தெரியும்.

    திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.631.48 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ. 63.74 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2.66 லட்சம் பயனாளிகளுக்க ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பா.ஜ.க.வுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து சரணாகதி அடைந்து விட்டனர்.

    * தமிழ்நாட்டின் தனித்தன்மை குறித்து தெரிந்து கொண்டு வடமாநிலத்தவர்கள் நமக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    * தமிழ்நாட்டின் மீது வெறுப்பை பரப்பினால் வடமாநிலங்களில் ஓட்டு கிடைக்கும் என பா.ஜ.க. நம்புகிறது.

    * ஜி.எஸ்.டி.யால் மாநிலத்திற்கு வரி உரிமையும் இல்லை. வருவாயும் இல்லை.

    * நான் தி.மு.க. ஆதரவாளன் இல்லை, ஆனால் 'நான் முதல்வன்' சிறந்த திட்டம் என பாராட்டுகிறார்கள்.

    * மாநில உரிமையை விட்டுக்கொடுக்காததால் சமூக வலைதளங்களில் பாராட்டு கிடைக்கிறது.

    * தமிழக அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கினாலும் நமக்கு ஆதரவாக வடமாநில இளைஞர்கள் வீடியோ பதிவிடுகிறார்கள்.

    * பா.ஜ.க. ஆதரவாளர்களே தற்போது மத்திய அரசை கழுவி ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

    * 100 நாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பது திருவண்ணாமலை மக்களுக்கு நன்கு தெரியும்.

    * சாதனை படைத்த 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு மூடுவிழா நடத்தி உள்ளது.

    * 10 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்த 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அழித்து விட்டனர்.

    * 100 நாள் வேலைத்திட்ட பிரச்சனையில் பா.ஜ.க.வுக்கு இ.பி.எஸ். ஆதரவாக உள்ளார்.

    * தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சி தலைவர் 100 நாள் வேலை திட்டம் அழிப்புக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் தான் திருவண்ணாமலை.
    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1.30 கோடி மகளிர் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ரூ.631.48 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ. 63.74 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2.66 லட்சம் பயனாளிகளுக்க ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆர்வத்துடன் திரண்டிருக்கும் உங்களை பார்க்கும்போது புது எனர்ஜி வருகிறது.

    * ஆன்மீகத்தில் ஒளிவீசி ஆன்மீக அன்பர்களை ஈர்க்கும் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம்.

    * வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் தான் திருவண்ணாமலை.

    * தி.மு.க.வுக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினரை கொடுத்த முதல் மாவட்டம் திருவண்ணாமலை.

    * 2025-ம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

    * விடியல் பயணம் 900 கோடி முறை மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர்.

    * கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1.30 கோடி மகளிர் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர்.

    * எங்கள் அண்ணன் கொடுக்கும் சீர் என பெண்கள் கூறும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.

    * ஒவ்வொருவரையும் சென்று சேரும் வகையில் தி.மு.க.வின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * 4 திட்டத்தில் மட்டும் பயன்பெறும் பயனாளிகளுக்கு மாதம் ரூ.4000 மிச்சமாகிறது.

    * நான்கரை ஆண்டுகளில் நாடு போற்றும் திட்டங்களை திராவிட மாடல் அரசு கொடுத்துள்ளது.

    * ஒவ்வொரு திட்டத்தின் வெற்றிக் கதைகளையும் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது.

    * மாதிரிப்பள்ளிகள் என்ற திட்டம் தான் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று.

    * திருவண்ணாமலையில் 21,463 மாணவிகள் புதுமைப் பெண்களாய், 19,376 மாணவர்கள் தமிழ் புதல்வனாய் உள்ளனர்.

    * புதுமைப் பெண்கள், தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    * திருவண்ணாமலையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச காலை உணவு வழங்கப்படுகிறது.

    * சொல்ல சொல்ல பெருமை கொள்ளக்கூடிய வகையில் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

    * திருவண்ணாமலை ஏந்தல் கிராமத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும்.

    * செங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும்.

    * வேளாண் சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் மடையூரில் ரூ.3.94 கோடியில் மையம் அமைக்கப்படும்.

    * கலசபாக்கத்தில் உள்ள கோவில் ரூ.5 கோடியில் புனரமைக்கப்படும்.

    * நிதி கொடுக்காமல் முடக்கினாலும் அதனை மீறியும் வளர்வதால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல்.

    * தமிழ்நாட்டின் வளர்ச்சி பலரது கண்களை கூசச்செய்கிறது. அதனால் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது.

    * திட்டங்களை அறிவித்து விட்டு நிறைவேற்றும் வரை யாரும் தூங்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய பயிர் ரகங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் கருவிகள் போன்றவை பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • தி.மு.க. ஆட்சியில் 5 பட்ஜெட்டுகளில் வேளாண்துறைக்கு ரூ.1.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் ரூ.631.48 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * உலகத்தை பசுமையாக்கிய ஒவ்வொருவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளால் சிந்தனையும் பசுமை ஆகிறது.

    * உழவர்களின் பின்னால் தான் நாம் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் இந்த விழா அமைந்துள்ளது.

    * விவசாயம், விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி.

    * நமது வேளாண்மையை உலகத்தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது, அந்த வளர்ச்சி வேளாண் துறைக்கும் வந்து சேர வேண்டும்.

    * தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயிகளை சென்று சேர்ந்தால் தான் அது உண்மையான வளர்ச்சி.

    * தொழில்நுட்பங்களை தேடி விவசாயிகள் அலையக்கூடாது என்பதற்காக தான் வேளாண் கண்காட்சியை கொண்டு வந்துள்ளோம்.

    * புதிய பயிர் ரகங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் கருவிகள் போன்றவை பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பது, சேமிப்பது போன்றவற்றை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * விவசாயிகளுக்காக கண்காட்சியில் 13 தலைப்புகளில் கருத்தரங்கு, கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * விவசாயி வேடம் போட்டு சிலர் அரசியல் செய்வார்கள், விவசாயிகளை பாதிக்கிற சட்டத்தையும் ஆதரிப்பார்கள்.

    * விவசாயி வேடத்தை போட்டுக்கொண்டு விவசாயிகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்தவும் செய்வார்கள்.

    * தி.மு.க. ஆட்சியில் வேளாண் துறைக்கு 33 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை முறையாக உரிய நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டில் 55,750 தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி உள்ளோம்.

    * தி.மு.க. ஆட்சியில் 5 பட்ஜெட்டுகளில் வேளாண்துறைக்கு ரூ.1.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    * இந்தாண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * திருவண்ணாமலையில் ரூ.5 கோடியில் சிறப்பு சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்

    * பெரணமல்லூர் பகுதியில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

    * வேளாண் விளைபொருட்களை உலர்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய உலர் கூடம் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சாலையோரம் நின்ற மக்களுக்கு கைகொடுத்து முதலமைச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு பயணமாக நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மாலை சுமார் 4 மணியளவில் திருவண்ணாமலைக்கு வந்த அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

    திருவண்ணாமலை மாநகராட்சிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் திருவண்ணாமலையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையின் முக்கிய வீதிகளில் ரோடு ஷோ சென்றார்.

    சாலையின் இருபுறமும் நின்றிருந்த தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையோரம் நின்ற மக்களுக்கு கைகொடுத்து முதலமைச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உழவர் நல சேவை மையங்களை அவர் திறந்து வைத்தார்.

    • கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • சிகிச்சை பலனின்றி கலைவாணனும், பவுனு அம்மாளும் பரிதாபமாக இறந்தனர்.

    திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் சக்திவேல். இவரது தாயார் பவுனு அம்மாளுக்கு (வயது 70) உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி பவுனுஅம்மாளை காரில் விழுப்புரத்துக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தனர். காரில் சக்திவேலின் மனைவி கனகவல்லி (வயது 36). சக்திவேலின் தம்பி கோவிந்தராஜ் (42), அவரது மாமனார் கலைவாணன் (60, ஆகியோர் சென்றனர்.

    திருவண்ணாமலையை அடுத்த ராஜந்தாங்கல் பகுதியில் விழுப்புரம் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் எதிரே விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன் பக்கத்தில் சிக்கிக் கொண்ட கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லபட்டதில், காரின் ஒரு பக்க மேற்கூரை முழுவதும் நசுங்கி சேதமானது.

    இந்த சம்பவத்தில் சக்திவேலின் மனைவி கனகவல்லி, தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் காரில் சென்ற கோவிந்தராஜ், கலைவாணன், பவுனு அம்மாள் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் துடிதுடித்தனர். அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணனும், பவுனு அம்மாளும் பரிதாபமாக இறந்தனர். கோவிந்தராஜனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவல்லியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் மாமியார், மருமகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும்.
    • திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    பாஜகவிற்கு எதிராக கொள்கை ரீிதியாக திமுக வெற்றி பெற்று வருகிறது. பாஜகவினரால் வெற்றிக்கொள்ள முடியாதது தமிழ்நாட்டில் மட்டும் தான். தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது. சங்கி படைகளை கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    அன்போது வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம். இந்தயாவிலேயே சித்தாந்த ரீதியாக சண்டை போடும் ஒரே மாநில கட்சி திமுக தான்.

    மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    அரசியலில் சொகுசு பார்க்க வேண்டாம்; கடுமையாக உழைத்தால் தான் இடம் கிடைக்கும். கடந்த கால ஆட்சியாள்கள் செய்த தவறை திமுக இளைஞரணி கொண்டு சேர்க்க வேண்டும்.

    கடந்த கால ஆட்சியர்கள் மீண்டும் ஆட்சி வந்தால் நடக் உள்ள அநீதிகளை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக முன்பு இல்லாத அளவிற்கு ஆக்ரோஷத்துடன் செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் திராவிட மாடல் 2.O அமைய திமுக இளைஞரணி கடுமையக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×