search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் வசதிக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில்    மாற்றுப்பாதை திறப்பு
    X

    கோப்புபடம். 

    பொதுமக்கள் வசதிக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் மாற்றுப்பாதை திறப்பு

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று மாற்று பாதை திறக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த இடத்தில் மருத்துவமனைக்கான வழி உயரமாக உள்ளது. இதில்,வயதானவர்கள், சிறுவர்கள் செல்ல,சிரமம் ஏற்பட்டுள்ளதால், மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள மாற்று பாதை தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ளது. பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று மாற்று பாதை திறக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×