search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நகராட்சி கூட்டத்தில் 126 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    X

    நகராட்சி தலைவர் மு.மத்தீன் தலைமையில் கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    உடுமலை நகராட்சி கூட்டத்தில் 126 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    • நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் நோக்கத்தில் நகராட்சிக்கு சொந்தமான காலியிடங்களை குத்தகைக்கு ஏலம் விடலாம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
    • கழுத்தறுத்தான் பள்ளத்தில் (ஓடை) இருந்து ஏரிப்பாளையம் வரை ஓடையை தூர்வாரி இருபுறமும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெறுகிறது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது .கூட்டத்தை நகராட்சி தலைவர் மு.மத்தின் தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் நடந்த உறுப்பினர்களின் காரசார விவாதம் வருமாறு:-சி. வேலுச்சாமி: நகராட்சி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான காலியிடங்களை குத்தகைக்கு விடுவதற்கான ஏலத்திற்கு தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்களே அவ்வாறு ஏலம் விட சட்டத்தில் இடம் உள்ளதா. சில தீர்மானங்களை அதிகாரிகள் சரியாக கவனித்து அஜெண்டாவில் சேர்க்க வேண்டும் .அதிகாரிகள் சென்று விடுவீர்கள். பின்னர் கவுன்சிலர்கள் பதில் சொல்ல வேண்டியதாகிவிடும்.

    மு.மத்தின் (தலைவர்): நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் நோக்கத்தில் தான் நகராட்சிக்கு சொந்தமான காலியிடங்களை குத்தகைக்கு ஏலம் விடலாம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. உடனடியாக செய்ய முடியாது. உயர் அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதனால் தீர்மானத்தை நிறைவேற்றி உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம்.

    சு.கலைராஜன், துணைத் தலைவர்:

    உடுமலை நகராட்சி நூற்றாண்டு நினைவாக நடைபெறும் வளர்ச்சி திட்டபணிகளில் கழுத்தறுத்தான் பள்ளத்தில் (ஓடை) இருந்து ஏரிப்பாளையம் வரை ஓடையை தூர்வாரி இருபுறமும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் ஓரிடத்தில் தொடங்கப்பட்டால் அந்த இடத்தில் பணிகள் முழுமையாக செய்யப்படுவதில்லை. ஆங்காங்கே இடையேஇடையே செய்யப்படுகிறது.

    இப்போது இந்த ஓடைப்பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதாக கூறுகின்றனர். ஆக்கிரமிப்பு களை அகற்றிவிட்டு அந்த இடங்களைஅளவீடு செய்து திட்டம் தயாரித்திருக்க வேண்டும். மொத்தத்தில் உடுமலை நகராட்சியில் உள்ள துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை .உதாரணமாக பொறியியல் துறைக்கும் சுகாதாரத்துறைக்கும் ஒத்துழைப்பு இல்லை. இது போன்று தான் மற்ற துறைகளும் உள்ளது. நகராட்சியில் உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் பணிகள் நன்றாக நடைபெறும்.

    மு.ஜெயக்குமார்:

    உடுமலை நகராட்சியில் முந்தைய ஆட்சியில் ரூபாய் 13 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளது .அதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது .இது சிறப்பு தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தற்போதைய நிலை என்ன?

    மு.மத்தின் (தலைவர்)

    இது தொடர்பான நடவடிக்கை குறித்து அடுத்த கூட்டத்தில் வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் .இவ்வாறு உறுப்பினர்களின் காரசார விவாதம் நடந்தது.

    கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகராட்சி ஆணையர் சத்தியநாதன் உள்ளிட்ட அலுவலர்களும் பதில் அளித்தனர் .கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் செல்லப்பா என்கிற அப்துல் கய்யூம். சாந்தி. ஆசாத். ரீகன் .விஜயலட்சுமி .ராமதாஸ். சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் பேசினர் .கூட்டத்தில் மொத்தம் 128 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் இரண்டு தீர்மானங்களை தவிர மற்ற 126 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×