search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூரில் மணல் கடத்திய வாலிபர் கைது
    X

    ஆம்பூரில் மணல் கடத்திய வாலிபர் கைது

    • டிராக்டர் பறிமுதல்
    • சிறையில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சான்றோர் குப்பம் கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கோவிந்தராஜ் வயது (25) என்பவர் அனுமதி இன்றி டிராக்டரில் மணல் கடத்தி வந்த போது டிராக்டரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    இரவு நேரத்தில் இவர் ஆம்பூர் பாலாற்றில் இருந்து மணலை கடத்தி வந்து சான்றோர்கப்பம் மாதகடப்பா பகுதியில் பதுங்கி வைத்து மணல் வியாபாரம் செய்து வந்ததாக தெரிவித்தார்.

    போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து கோவிந்தராஜ் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×