search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை
    X

    விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை

    • வீட்டில் உள்ளவர்களை அறையில் பூட்டி வைத்து விட்டு விபரீதம்
    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 63). விவசாயி. இவரது மனைவி பார்வதி, இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். முனிரத்தினத்திற்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நள்ளிரவு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அனைவரையும் அறையில் வைத்து பூட்டிவிட்டு முனிரத்தினம் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்தவர்களை வெளியே அழைத்து வந்தனர்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்து முனிரத்தினம் உடலை மீட்டனர்.

    இச்சம்பவம் அறிந்தது ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×