search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் நேரம் மாற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
    X

    பஸ் நேரம் மாற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

    • மாணவ- மாணவிகள் கடும் அவதி.
    • அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூரில் இருந்து அரங்கல்துருகத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது . இந்த பஸ் ஆம்பூரில் இருந்து வெங் கடசமுத்திரம் , காரப்பட்டு வழியாக அரங்கல் துருகத்தை அடையும் .

    காலை 8.10 மணிக்கு மீண்டும் அங்கிருந்து புறப் பட்டு ஆம்பூர் வந்தடைகிறது . இந்த டவுன் பஸ் தற்போது கூடுதலாக சில பகுதிகளுக்கு சென்று அரங்கல் துருகத்திற்கு வருகிறது . இதனால் 9 மணிக்கு நேரம் மாற்றம் செய்யப்பட்ட தால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது . இதனால் பழைய நேரத்திலேயே பஸ்சை இயக்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர் .

    மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்த னர் . இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் அரசு போக்குவரத் துக்கழக அதிகாரிகள் அங்கு வந்து பழைய நேரத்திலேயே பஸ்சை இயக்குவதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

    Next Story
    ×