search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டையில் செஸ் போட்டி
    X

    ஜோலார்பேட்டை பகுதியில் செஸ் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தொடங்கி வைத்தார்.

    ஜோலார்பேட்டையில் செஸ் போட்டி

    • மாவட்ட வருவாய் அலுவலர் ெதாடங்கி வைத்தார்
    • மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி காந்தி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியா போட்டி சென்னையில் நடைபெறுவதையொட்டி மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க கடந்த 15ஆம் தேதி சதுரங்கப் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவியம், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை திருப்பத்தூர் நகரப் பகுதியில் துவக்கி வைத்து தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியானது வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்க வரும் 25ஆம் தேதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்க உள்ளார். மேலும் சதுரங்க போட்டியில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு பின்னர் சென்னையில் நடைபெற உள்ள 44 வது செஸ் ஒலிம்பியா போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை நகராட்சி அளவிலான சதுரங்க போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று குத்துவிளக்கு ஏற்றி சதுரங்க விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை துவக்கி வைத்தார்.

    அப்போது செஸ் விளையாட்டு குறித்த வரலாற்றையும், கல்வி மட்டுமே இருக்காமல் கைத்தொழில் ஒன்றை பழகிக்கொள்ள, இதற்காக பள்ளிகளில் நடத்தப்படும் பல்வேறு விதமான சதுரங்கம், தையல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு போட்டியில் வென்று சாதனை படைக்க வேண்டும். மேலும் இவ்வாறு பல்வேறு போட்டிகளில் பங்கு பெற செய்வதால் மாணவர்களின் அவரவர்களின் திறமைகள் வெளியே கொண்டுவரப்படுகிறது. எனவே இந்திய தேசத்தையும் தமிழ்நாட்டையும் தலை நிமிரச் செய்ய பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார். இதனை அடுத்து போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுடன் செஸ் போட்டியை விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியின் போது வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மோகனகுமரன், திமுக நகர கழக செயலாளர் ம.அன்பழகன், நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற துணைத் தலைவர் பெ.இந்திரா பெரியார்தாசன், நகராட்சி பொறியாளர் கோபு உட்பட 15 அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும், மாணவ மாணவியர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    Next Story
    ×