search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை
    X

    நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்ட காட்சி.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை

    • முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும்.
    • திருசெந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரியாக இயங்கி வரும் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புகளாக எம்.ஏ. பொருளியல், எம்.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. வேதியியல் (சுயநிதி), எம்.எஸ்சி. விலங்கியல் (சுயநிதி) ஆகிய பிரிவுகளும், எம்.பில். ஆய்வு படிப்புகளாக எம்.பில். ஆங்கிலம், எம்.பில். பொருளியல், எம்.பில். கணிதம், எம்.பில். வேதியியல், எம்.பில். விலங்கியல் ஆகிய பிரிவுகளும் உள்ளன.

    இவற்றில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் ஆதித்தனார் கல்லூரி இணையதளத்தில் (www.aditanarcollege.com) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 04639-220625, 220632 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    திருசெந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உறுதிமொழியை படித்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்கள் 43, 44, 45, 48, 231 மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, கல்லூரி அலுவலர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் மருதையா பாண்டியன் மற்றும் அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×