என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி திசையன்விளை முதலாளி குளத்தில் 9 நாட்கள் நடந்தது.
    • 2-ம் பரிசு பெற்ற தஞ்சாவூர் அணிக்கு ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி ரகுமான் சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவி லான கிரிக்கெட் போட்டி திசையன்விளை முதலாளி குளத்தில் 9 நாட்கள் நடந்தது. போட்டிகளை நகர செயலாளர் ஜான் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. முடிவில் முதல் பரிசு பெற்ற ஆரல்வாய்மொழி அணிக்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் சார்பில் ரூ.1 லட்சம் மற்றும் வெற்றி கோப்பையும், 2-ம் பரிசு பெற்ற தஞ்சாவூர் அணிக்கு ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி ரகுமான் சார்பில் ரூ.50 ஆயிரமும், 3-வது பரிசு பெற்ற திசையன்விளை அணிக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுவீகர், மாவட்ட பொறியா ளர் அணி துணை அமைப்பார் அண்ரூ ஜேசன் ஆகியோர் சார்பில் ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    4-வது பரிசு பெற்ற அணிக்கு தங்கையா ஸ்வீட்ஸ் சார்பில் ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப் பட்டது. விழாவில் ராதாபு ரம் ஒன்றிய துணை அமைப் பாளர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த 15-ந் தேதி நிறுவனத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை.
    • இதையடுத்து மாணவியின் தாயார் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி முனைஞ்சி பட்டியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 15-ந் தேதி நிறுவனத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்களை வழங்கினார்.

    திசையன்விளை:

    ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் 15-வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து யூனியனில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ் தலைமை தாங்கினார். யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் முன்னிலை வகித்தார்.

    நெல்ைல மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்களை வழங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிளாரன்ஸ் விமலா, நடராஜன், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், சாந்திகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், மேகலா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆண்டு சங்கர் கொலை செய்யப்பட்டார்.
    • மகேந்திரன் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினார்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் நொச்சி குளத்தை சேர்ந்தவர் சங்கர் மனைவி கோமதி (வயது 25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னை கிண்டியில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு சங்கர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோமதி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரது 2 குழந்தைகளில் ஒரு குழந்தையை சங்கரின் பெற்றோரும், மற்றொரு குழந்தையை கோமதியின் பெற்றோரும் அழைத்து சென்று வளர்த்து வருகின்றனர்.

    மேலும் குழந்தைகளை யார் பராமரிப்பது என்பது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளி வந்த கோமதி இன்று காலை தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து குழந்தையை என்னிடம் தந்து விடுங்கள் என கேட்டுள்ளார்.

    அப்போது அவருக்கும் அவரது தம்பி மகேந்திரன் (22) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினார். இதில் கோமதி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். உடனே மகேந்திரன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிவந்திபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கோமதியை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மாணவிகளின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர்.
    • மாணவிகள் பஸ்சில் ஏறுவது, இறங்குவதில் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    போலீஸ் நிலையத்தில் புகார்

    ஏழை-எளிய மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளி தொடங்கும் நேரத்திலும், முடியும் வேளையிலும் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் சிலர் தொல்லை கொடுப்பதாகவும், பஸ்களில் மாணவிகளை முறையாக ஏற்றி செல்வதில் உரிய பாதுகாப்பின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

    மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், போக்குவரத்தை சீர் செய்திடவும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வி மேலாண்மை குழு மூலமாக பேட்டை போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் போலீசாரின் போதிய நடவடிக்கை இன்றி மாணவிகள் இன்னலுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர்.

    மாணவிகளிடம் கேலி, கிண்டல் செய்வது, தவறாக அணுகுவது உள்ளிட்ட அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவிகள் பஸ்சில் ஏறுவது மற்றும் இறங்குவதில் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.அந்த வேளைகளில் போலீசார் மாணவிகளின் நலம் கருதி போக்குவரத்தை சீர் செய்திடவும் , மாணவி களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

    அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய டவுன் உதவி கமிஷனர் சுப்பையா பஸ் நிறுத்தத்தில் உரிய போலீசார் பாது காப்பு பணிகளை மேற்கொள்ள வும், போக்கு வரத்தினை சீர் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரி வித்ததையடுத்து அவர் கள் கலைந்து சென்றனர்.

    • போட்டியில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர்.
    • சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம், கோப்பையை வென்றது.

    நெல்லை:

    மாநில அளவிலான வக்கீல்கள் இடையேயான கபடி போட்டி தூத்துக்குடி தருவைகுளம் மைதானத்தில் நடந்தது. இதில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த போட்டிகளில் நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க அணி முதல் பரிசு ரூ.75 ஆயிரத்தையும், கோப்பையையும் தட்டிச்சென்றது. சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம் மற்றும் கோப்பையும், தூத்துக்குடி அணி 3-வது பரிசாக ரூ.45 ஆயிரமும் பெற்றன. விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் அமல் ராஜ், துணைத்தலைவர் வேலு கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஷ் பிரபு, தூத்துக்குடி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நெல்லை வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன், மூத்த வக்கீல் பாலகணேசன், செந்தில்குமார், பொருளாளர் ராஜா, உதவி செயலாளர் சிதம்பரம், நூலகர் இசக்கி பாண்டியன் மற்றும் வக்கீல்கள் லட்சு மணன் ரமேஷ், மகேஷ், மகாராஜன், முத்துராஜ், கதிரவன், அனந்த கிருஷ்ணன், எட்வின் துரை ஆகியோர் பங்கேற்றனர்.

    • மாலையில் அய்யா நாராயணசுவாமியின் வாகன பவனி இடம்பெற்றது
    • ஸ்ரீகுரு சிவசந்திரர் வாகன பவனியை தொடங்கி வைத்தார்.

    களக்காடு:

    களக்காட்டில் வட்டார அய்யாவழி மக்கள் மாநாட்டுக்குழு சார்பில் அய்யா வழி 8-வது மாநாடு நடந்தது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், அதனைதொடர்ந்து அன்ன தானமும் வழங்கப்பட்டது.

    திருஏடு வாசிப்பு

    தொடர்ந்து திருஏடு வாசித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. அதன் பின் மாலையில் அய்யா நாராயணசுவாமியின் வாகன பவனி இடம்பெற்றது. சிறப்பு பணிவிடைகளுக்கு பின் அய்யா நாராயணசுவாமி வாகனத்திற்கு எழுந்தருளினார். ஸ்ரீகுரு சிவசந்திரர் வாகன பவனியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயண சுவாமி களக்காடு ரதவீதிகளில் உலா வந்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாநாடு நடைபெற்றது. முன்னள் எம்.பி. ஜெயத்துரை தலைமை தாங்கினார். வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், அரிசிவராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணகுடி சுரேஷ் நாரணமே வைகுண்டம் என்ற தலைப்பிலும், சிறயன்விளை சாந்தகுமாரி, அகிலத் திரட்டில் வாழ்வியல் கருத்து என்ற தலைப்பிலும் பேசினர்.

    அருள் இசை வழிபாடு

    தொடர்ந்து ஸ்ரீகுருசிவசந்திரரின் அருள் இசை வழிபாடும் நடந்தது. ஏற்பாடுகளை அய்யாவழி மாநாட்டு குழு தலைவர் சங்கரன், துணை தலைவர் ராமலிங்கம், ஒருங்கிணைப்பா ளர் பால்சாமி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சண்முகநாதன், இணை செயலாளர்கள் முத்துப்பாண்டி, சொர்ணலிங்கம், முத்துராஜ், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மாரியப்பன் மானூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
    • மாரியப்பன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள பள்ளமடை வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (வயது25). கட்டிட தொழிலாளியான இவர் நேற்றிரவு மானூருக்கு சென்றிருந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். மானூர் பஜாரில் வந்த போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மாரியப்பன் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் மாரியப்பன் மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பாளை மகாராஜ நகரில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வசந்தகுமாரின் படத்திற்கு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பாளை மகாராஜ நகரில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., வசந்தகுமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொறுப் பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட இணை செயலாளர் ராம நாதன், கிராம கமிட்டி தலைவர் அப்பாதுரை மற்றும் காங்கிரஸ் நிர்வா கிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    • ராசாத்தி தனது குடும்பத்தினர்களுடன் மதுரை, பகலவன்நகரில் வசித்து வருகிறார்.
    • வீடு விற்பனை செய்வது தொடர்பாக ராசாத்திக்கும் அவரது சகோதரரான பரோபகர் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள வடக்கு காடன்குளத்தை சேர்ந்தவர் ராசாத்தி (வயது 42). இவர் தனது கணவர் அருள்ஜோதி மற்றும் குடும்பத்தினர்களுடன் மதுரை, பகல வன்நகரில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு காடன்குளத்தில் உள்ளது. இதனை விற்பனை செய்ய ராசாத்தி ஏற்பாடு செய்து வந்தார். இதுதொடர்பாக அவருக்கும், அவரது சகோதரரான வடக்கு காடன்குளத்தை சேர்ந்த பரோபகர் (49) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ராசாத்தியின் கணவர் அருள்ஜோதி வீட்டில் இருக்கும் போது, அங்கு வந்த பரோபகர், அவரது மனைவி கவுசல்யா, மகன் சுபாஷ் கோபி ஆகியோர் அருள்ஜோதியுடன் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த பரோபகர், அவரது மனைவி கவுசல்யா, மகன் சுபாஷ் கோபி ஆகியோர் சேர்ந்து அருள்ஜோதியை கட்டையால் தாக்கினர். இதனை தடுக்க வந்த ராசாத்தியும் தாக்கப்பட்டார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி மூலைக்கரை ப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பரோபகர் அவரது மனைவி மற்றும் மகன் சுபாஷ் கோபி ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்ட வாராந்திர பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு தென் வடல் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் குளத்தில் செத்த மீன்களை மாலையாக அணிந்து வந்து மனு அளித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வாராந்திர பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

    தே.மு.தி.க.

    மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சண்முகவேல் தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் 7-வது வார்டு பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதுவரை பிரதான சாலையில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரம் உள்ள எங்கள் பகுதிக்கு பாதையே இல்லை. காட்டு பாதையில் மண் சாலையிலும், மழை காலத்தில் சகதிகளுக்கு இடையிலும் நடந்து சென்று வருகிறோம்.

    இதனால் மழை காலத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்த சாலையில் நடந்து செல்வதால் முதியவர்கள் தவறி விழுந்து காயங்கள் ஏற்பட்டு வருகிறது. எங்கள் பகுதிக்கு 3 பொது குடிநீர் இணைப்பு மட்டும் தான் உள்ளது.

    எங்கள் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இணைப்பு வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் பொது மக்களுக்கு ஆபத்து நிகழும் சூழ்நிலை உள்ளது. எங்கள் பகுதியில் இருந்து அதிக தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் சாலை, மின் இணைப்பு, குடிநீர் வசதிகள், ரேஷன் கடை என அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    அப்போது பகுதி செயலாளர் மணி கண்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகப் பிரியன், கார்த்திகேயன், தச்சை பகுதி செயலாளர் ராஜூ, மானூர் ஒன்றிய அவைத்தலைவர் பாபுராஜ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சிவ குமார், பாளை பகுதி முருகன் மற்றும் சாமித்துரை, மகராஜன், மாடசாமி, ஆறுமுகம், திரவியம், மணி கண்டன், சகாதேவன், வெற்றி வேல், பேச்சிமுத்து, சுப்பிரமணியன், ரமேஷ் மாரியப்பன், சுபாஷ், மாசா னம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    மீன் பிடிக்க...

    தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு தென் வடல் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் குளத்தில் செத்த மீன்களை மாலையாக அணிந்து மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன் மற்றும் ஊர் பொது மக்களுடன் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜனவரி 31-ந் தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களில் மீன் பிடிக்க பொது ஏலம் விடப்பட்டது. அப்போது மீன் பாசி குத்தகைக்காக நயினார் குளத்தினை ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 579-க்கு நான் ஏலம் எடுத்தேன். தற்போது குளத்தில் தண்ணீர் வற்றி குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் ரூ.40 ஆயிரம் மதிப்பில் கட்லா மீன்கள் மற்றும் ரோகு வகை மீன்கள் வளர்த்து வந்தேன்.

    அதில் நான் வளர்த்து வரும் மீன்களை பிடிக்க சென்ற போது பொதுப்பணித்துறையினர் உங்களுக்கான அவகாசம் முடிந்துவிட்டது எனக்கூறி மீன் பிடிக்க அனுமதி மறுக்கின்றனர். இதனால் தற்போது அங்கு மீன்கள் செத்து மிதந்து வருகின்றது. மேலும் மீன்களை பிடிக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறி வருகின்றனர். எனவே எனக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வில் ஆண்கள் 4,312 பேரும், பெண்கள் 1,304 பேரும் என மொத்தம் 5,616 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வுக்கு விண்ணப் பித்ததில் 1,293 பேர் தேர்வு எழுத வரவில்லை. இன்று காவல்துறையில் முதல் நிலை மற்றும் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிந்து 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.

    எஸ்.பி. ஆய்வு

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 725 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இந்த தேர்வினை எழுதுவதற்கு 170 பேர் வரவில்லை. தேர்வு பாளையில் உள்ள ஜான்ஸ் கல்லூரி மையத்தில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார்.

    ×