திசையன்விளையில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி - ஆரல்வாய்மொழி அணிக்கு முதல்பரிசு

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி திசையன்விளை முதலாளி குளத்தில் 9 நாட்கள் நடந்தது. 2-ம் பரிசு பெற்ற தஞ்சாவூர் அணிக்கு ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி ரகுமான் சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழா நடந்தபோது எடுத்த படம்.
பரிசளிப்பு விழா நடந்தபோது எடுத்த படம்.
Published on

திசையன்விளை:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவி லான கிரிக்கெட் போட்டி திசையன்விளை முதலாளி குளத்தில் 9 நாட்கள் நடந்தது. போட்டிகளை நகர செயலாளர் ஜான் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. முடிவில் முதல் பரிசு பெற்ற ஆரல்வாய்மொழி அணிக்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் சார்பில் ரூ.1 லட்சம் மற்றும் வெற்றி கோப்பையும், 2-ம் பரிசு பெற்ற தஞ்சாவூர் அணிக்கு ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி ரகுமான் சார்பில் ரூ.50 ஆயிரமும், 3-வது பரிசு பெற்ற திசையன்விளை அணிக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுவீகர், மாவட்ட பொறியா ளர் அணி துணை அமைப்பார் அண்ரூ ஜேசன் ஆகியோர் சார்பில் ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.

4-வது பரிசு பெற்ற அணிக்கு தங்கையா ஸ்வீட்ஸ் சார்பில் ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப் பட்டது. விழாவில் ராதாபு ரம் ஒன்றிய துணை அமைப் பாளர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com