search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyavazhi"

    • மாலையில் அய்யா நாராயணசுவாமியின் வாகன பவனி இடம்பெற்றது
    • ஸ்ரீகுரு சிவசந்திரர் வாகன பவனியை தொடங்கி வைத்தார்.

    களக்காடு:

    களக்காட்டில் வட்டார அய்யாவழி மக்கள் மாநாட்டுக்குழு சார்பில் அய்யா வழி 8-வது மாநாடு நடந்தது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், அதனைதொடர்ந்து அன்ன தானமும் வழங்கப்பட்டது.

    திருஏடு வாசிப்பு

    தொடர்ந்து திருஏடு வாசித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. அதன் பின் மாலையில் அய்யா நாராயணசுவாமியின் வாகன பவனி இடம்பெற்றது. சிறப்பு பணிவிடைகளுக்கு பின் அய்யா நாராயணசுவாமி வாகனத்திற்கு எழுந்தருளினார். ஸ்ரீகுரு சிவசந்திரர் வாகன பவனியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயண சுவாமி களக்காடு ரதவீதிகளில் உலா வந்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாநாடு நடைபெற்றது. முன்னள் எம்.பி. ஜெயத்துரை தலைமை தாங்கினார். வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், அரிசிவராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணகுடி சுரேஷ் நாரணமே வைகுண்டம் என்ற தலைப்பிலும், சிறயன்விளை சாந்தகுமாரி, அகிலத் திரட்டில் வாழ்வியல் கருத்து என்ற தலைப்பிலும் பேசினர்.

    அருள் இசை வழிபாடு

    தொடர்ந்து ஸ்ரீகுருசிவசந்திரரின் அருள் இசை வழிபாடும் நடந்தது. ஏற்பாடுகளை அய்யாவழி மாநாட்டு குழு தலைவர் சங்கரன், துணை தலைவர் ராமலிங்கம், ஒருங்கிணைப்பா ளர் பால்சாமி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சண்முகநாதன், இணை செயலாளர்கள் முத்துப்பாண்டி, சொர்ணலிங்கம், முத்துராஜ், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா இன்று தொடங்கியது.
    • விழாவில் ஒவ்வொரு நாளும் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கடற் கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா இன்று காலையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றம்

    முன்னதாக கொடி பட்டம் பதியைச்சுற்றி வந்து பதியை வந்தடைந்தது. பின்னர் கொடி மரத்தில் கொடியை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றினார். கொடி யேற்றத்தை தொடர்ந்து காலை 7 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாக னத்தில் பவனி, 9 மணிக்கு அன்னதர்மம்,12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவி டையம் நடைபெற்றது

    பகல் 1மணிக்கு அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, 6 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது.

    11நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடக்கிறது

    இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வை குண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம்,, கருட வாகனம், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திரன் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தர பாகவதர் குமார் ஜெய ராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

    கலந்து கொண்டவர்கள்

    திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார், அன்பாலயம் அகில பாரத அய்யாவழி மக்கள் பேரி யக்க தலைவர் குரு சிவ சந்திர சுவாமிகள், அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோ சகர் வக்கீல் சந்திரசேகர், நிர்வாக குழு உறுப்பி னர்கள் லட்சு மணன், ராமமூர்த்தி, முத்து குட்டி, பால கிருஷ்ணன், செல்வக் குமார், ஆதி நாரா யணன், ரத்தின பாண்டி, சுதேசன், இளங்கோ, உறுப்பினர்கள் சிவாஜி, வினோத், கண்ணன், கார்த்திக், வரத ராஜன், ஹரிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணை தலைவர்கள் விஜய குமார்,பால்சாமி, ராஜ துரை, கோபால், இணை செ யலாளர்கள் ராதா கிருஷ்ணன், தங்க கிருஷ் ணன், செல்வின், வரத ராஜ பெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரெட்டியார்பட்டி நாராயணன் பங்கேற்றார்.
    நெல்லை:

    குமரி மாவட்டம் உடையப்பன் குடியிருப்பில் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் முப்பெரும் விழா  நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்ன தர்மத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் அய்யாவழி சுரேஷ், முத்தூர் ஊராட்சி கழக செயலாளர் முத்தூர் நைனார், பாளை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மாயா ரகுராம், தருவை   கிளை செயலாளர் செல்லத்துரை மற்றும் அய்யாவழி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×