என் மலர்
திருச்சிராப்பள்ளி
- துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது.
- துப்புரவு பணியாளர்களுக்கு உள்ள பிரச்சனை நாடு முழுவதும் உள்ள பிரச்சனை.
திருச்சி:
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்பெல்லாம் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. கலைஞர் ஆட்சி காலத்தில் அது சரி செய்யப்பட்டது. தற்பொழுது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார்.
இது மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது. இந்த திட்டத்திற்காக 1128 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 88 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த போராட்டத்தை சுமூகமாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடுத்து வருகிறார். வட மாநில தொழிலாளர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது தகவல் தவறானது.
துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை. அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். நிச்சயம் அது பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும்.
நான் அவர்களை சென்று சந்திக்கவில்லை எனக் கூறுவது தவறு. ஏற்கனவே 4 முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன்.
துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். அ.தி.மு.க. ஆட்சியில் 17 ஆயிரம் பேரை துப்புரவு பணியாளர்களாக நிரந்தர பணியில் அமர்த்தினோம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கூறினார். ஆனால் அவர்கள் யாரும் துப்புரவு பணிக்கு செல்லவில்லை
துப்புரவு பணியாளர்களுக்கு உள்ள பிரச்சனை நாடு முழுவதும் உள்ள பிரச்சனை. இதில் முதலமைச்சர் உரிய முடிவு எடுப்பார். துப்புரவு தொழிலாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
தூய்மை பணி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஏற்கனவே பணியில் உள்ளவர்களை தான் பயன்படுத்தி வருகிறோம்
புதிதாக யாரையும் புதிதாக பணியில் எடுக்கவில்லை. தெரு நாய்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவு அருமையான உத்தரவு. அந்த உத்தரவு நகல் வந்த உடன் அதனை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவோம். மிகப்பெரிய பிரச்சனையான தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.
நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகிறோம். அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாமல் அறிவிக்காத வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தேர்தல் வருவதால் எதிர்க்கட்சிகள் ஏதாவது குறை கூறி வருகிறார்கள்.
தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது அதில் ஒரு தீர்வு ஏற்பட்டவுடன் இன்று அல்லது நாளைக்குள் தூய்மை பணியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்றார்.
- விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.கே. நகர்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலையத்தில் முனைய நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் சோதனை செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவின் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு முனையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இது வருகிற 20-ந் தேதி வரை தொடரும் என தெரிகிறது.
திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் விமான நிலைய இயக்குனர் ஞானேஸ்வரராவ் தேசிய கொடி ஏற்றி வைக்க உள்ளார். தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் மோப்பநாய் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
- புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
- 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத சி.பி.எஸ்.இ. ஒப்புதல்.
திருச்சி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் நேற்று புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது அவரிடம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்ற புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவை எப்படி வளர்க்க முடியும்? என்று தெரிவித்தார்.
- அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் . பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சின்ன சூரியூரில் உள்ள 100 ஏக்கர் அரசு தரிசு நிலத்தினை போலி பட்டா மூலமாக பிளாட் போட்டு விற்பனை செய்ததை கண்டித்தும், திருச்சி உறையூர் சின்ன செட்டி தெருவில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள நந்தவனத்தில் அமைந்திருக்கும் காகபுஜண்டா சித்தா மகரிஷி கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்க வலியுறுத்தியும் அலுவலக பூட்டை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் வெளியில் நின்ற உதவி கலெக்டர் காரின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- மனம் உடைந்த பொன். கார்த்திக் யாரும் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த வாரம் பொன் கார்த்திக் தனது நண்பர் ஒருவரிடம் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக புலம்பி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் கைகோல் பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையங்கிரி. இவரது மகன் பொன் கார்த்திக் (வயது 24). பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள இவர் திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பணி நிமித்தமாக பொன் கார்த்திக், ரவி ஆனந்த் என்ற நண்பருடன் நவல்பட்டு போலீஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். வழக்கமாக காலையில் வேலைக்கு புறப்பட்டு செல்வார். மாலையில் வீடு திரும்புவார். நேற்று வெகு நேரமாகியும் கார்த்திக் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து மாலையில் உடன் வேலை பார்க்கும் நண்பர் இளவரசன் அவரை தேடிச் சென்றார். அப்போது அறையில் பொன் கார்த்திக் தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர், இது பற்றி நவல்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில், கடன் தொல்லையால் தற்கொலை செய்தது தெரியவந்தது. பொன் கார்த்திக்குக்கு ஆன்லைனில் கடன் வாங்கும் பழக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவரால் கடன் தொகையை திரும்பச் செலுத்த இயலவில்லை.
இதனால் மனம் உடைந்த பொன். கார்த்திக் யாரும் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், கடந்த வாரம் பொன் கார்த்திக் தனது நண்பர் ஒருவரிடம் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக புலம்பி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐ.டி. நிறுவன இன்ஜினியர் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னையில் 9-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.
- பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லுமுல்லும் நடைபெறுவதாக தெரிகிறது.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லையில் நடந்த சம்பவம் போன்று தமிழகத்தில் பல பகுதிகள் மற்றும் மாநிலங்களிலும் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் வலியுறுத்தி வருகிறோம். பாராளுமன்றத்தில் இது குறித்து பேசியும், உள்துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதி உள்ளோம்.
தேசிய அளவில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடக்கின்ற இந்த கொடூரமான படுகொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் பரவலாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு பொருட்படுத்தவில்லை.
உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் இதுபோன்ற கொலைகளை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை வலியுறுத்தி தீர்ப்பளித்துள்ளது. சட்டபேரவையில் அதனை நிறைவேற்றும் வகையில் அதற்குரிய விதிகளை பயன்படுத்த வேண்டும். அதில் காவல்துறையினருக்கு வழிகாட்டுதலை வழங்கி சில நெறிமுறைகளை வரையறுத்துள்ளது. 2018ல் அந்தத் தீர்ப்பையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினரும் நடைமுறைபடுத்துவதில்லை என்பது வேதனை அளிக்கிறது.
இச்சூழலில் இச்சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கும் பொறுப்பு, அதிகாரம் உள்ளது. முதலமைச்சர் இது குறித்து ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் சட்டம் இயற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம். இதை வலியுறுத்தி வருகிற 9, 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் 9-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன். கிங்டம் திரைப்படம் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவதாக கூறுகிறார்கள். இதுவரை நான் அந்த படத்தை பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பிறகு சொல்கிறேன்.
பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லுமுல்லும் நடைபெறுவதாக தெரிகிறது. குறிப்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது, வெளி மாநிலங்கள் உள்ளவர்களுக்கு பீகார் மாநிலத்தில் வாக்காளர்களாக சேர்த்து அவர்களை வாக்களிக்க செய்வது கடந்த பாராளுமன்ற தேர்தலில் செய்திருக்கிறார்கள்.
அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது என்கிற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இந்தியா கூட்டணி உள்ள கட்சிகள் யாவும் கூறி உள்ளது.
இதனை பாராளுமன்றத்தில் குறிப்பாக விவாதிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. ஜூலை 21-ந் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இதுபற்றி விவாதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தும் ஆளும்கட்சி அதை ஏற்க மறுக்கிறது. அந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டங்களை ஈடுபட்டு வருகிறோம்.
அவர்கள் அதனை ஏன் விவாதிக்க தயங்குகின்றனர். தமிழகத்திலும் அதுபோன்று செய்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சிதறுகிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறது. அது சுதந்திரமாக இயங்கவில்லை. பா.ஜ.க.வின் முழுமையான கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் சிக்கி உள்ளது.
பா.ஜ.க. எந்த தில்லு முல்லையும் செய்வார்கள். பீகாரில் இதை ஒரு பரிச்சாத்தமாக வெளிப்படையாக செய்கிறார்கள்.
சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற ஒரு நடவடிக்கையாக இது இருக்கிறது. டெல்லியில் அனைத்து நாடுகளின் தூதரகங்கள் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து தமிழகத்தை சேர்ந்த எம்.பி.யின் கழுத்தில் இருந்த செயினை பதட்டம் இல்லாமல் ஒருவர் பறித்து சென்று இருக்கிறார்.
இது குறித்து புகார் கொடுத்தும் அதனை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. தலைநகர் புதுடெல்லியில் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது நாட்டின் மீதான நன்மதிப்பை உலக அரங்கில் வெளிநாடுகளில் வரக்கூடியவர்களிடையே களங்கத்தை உருவாக்க கூடியதாக இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் கூட்டணியாகவே உருவாகவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகள் இணைந்து இருக்கிறது, அவ்வளவுதான். அவர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு, சிதறப்போகிறார்கள் என்ற தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் அணியில் இருந்தவர்களே வெளியேறுகிறார்கள் என்றால் அந்த கூட்டணியின் உறுதிப்பாடு எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
வட மாநிலத்தவர்கள் லட்சக்கணக்கில் தொழிலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிற சூழலில் அவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக வருவதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளது.
இது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.
- இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள்.
- விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி:
கொள்ளிடம் அழகிரிபுரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு ரூ.7 கோடியில் கட்டிய தடுப்பணை சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சலவை தொழிலாளர்களுக்கு தடுப்பு சுவர், படித்துறை கட்டி தர கோரியும், காவிரியுடன் அய்யாற்றை இணைக்க வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது.
இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
- விவசாயிகள் கள் இறக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
- கல்வி கற்று விட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம்.
திருச்சி:
திருச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விவசாயிகள் கள் இறக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் அதை சீமான் மிகைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. கால்நடைகள் வளர்ப்பதும் பனை ஏறுவதும் கேவலமா? என சீமான் கேட்கிறார் அந்த தொழில்களை யாரும் கேவலம் என கூறவில்லை.
எங்களின் கொள்கை சமூக நீதி கொள்கை, சமத்துவக் கொள்கை தாழ்ந்து கிடக்கும் மனிதர்களை உயர்த்த வேண்டும் என்கிற கொள்கை. அனைவரும் கல்வி கற்க வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.
அவர்கள் கல்வி கற்று விட்டு எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்நுட்பங்கள் வந்துள்ளது. அந்த தொழில் நுட்பங்களின் பயன்களையும் அவர்கள் பெற வேண்டும்.
ஆனால் சீமான் பேசுவதை பார்க்கும்போது மக்களை மீண்டும் மனு ஸ்மிருதி காலத்திற்கு அழைத்து சென்று குலத்தொழிலை செய்ய வேண்டும் என்கிற தொனியில் உள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
சமூகத்திற்கு கல்வி அடிப்படையாக தேவை என நம் தலைவர்கள் வழிகாட்டி உள்ளார்கள். கல்வி கற்று விட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம்.
சிபில் ஸ்கோர் விவகாரத்தை நிவர்த்தி செய்து வருகிறோம். கடன் வாங்குவதற்கு முனைப்பு காட்டுவது போல் கடனை திருப்பி செலுத்துவதற்கும் முனைப்பு காட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
- மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வையம்பட்டி:
கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வாழ்வார்மங்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலவெளியூரை சேர்ந்தவர் முத்து (67). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வையம்பட்டி அருகே உள்ள தேக்கமலை கோவிலில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு கடவூர் செல்வதற்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்தனர். தேக்கமலை கோவில்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் தாளகுளத்துப் பட்டியை சேர்ந்த வடிவேல் (39) என்பவர் வந்தார்.
எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்து, வடிவேல் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது.
- நாம் அனைவரும் சாதியை மறந்து ஒன்றாக கை கொடுக்க வேண்டும்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சக்தி நகரில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கள் விடுதலை இயக்க மாநாடு நடைபெற்றது.
பனையேறிகள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சீமான் பேசும்போது கூறியதாவது:
கள் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பீர், விஸ்கி, பிராந்தி குடிப்பதால் உடல் நலமாகும் என சொல்ல முடியுமா? தி.மு.க.வின் பகுத்தறிவில் தீயை வைத்து கொளுத்த வேண்டும்.
கள் இறக்குவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. காரணம் ஆட்சியாளர்கள் அங்கு ஆலைகளை நடத்த வில்லை.
தமிழ்நாட்டில் மதுபான ஆலை அதிபர்கள் நலனுக்க கவே அரசு கள் இறக்குவதற்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும்.
தமிழகத்தில் மகளிருக்கு பேருந்து கட்டணம் இலவசம் ஆனால் கல்வி கட்டணம் ரூ.10 லட்சம். ஆகையால் தான் பஸ்ஸில் இலவசம் வேண்டாம். கல்வியை இலவசமாக கொடுங்கள் என கேட்கிறோம்.
3500 அரசு காலிப்பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அப்படி என்றால் 13 லட்சம் பேரும் வேலை இல்லாமல் இங்கு தெருவில் நிற்கிறார்கள்.
மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூ. 1000, மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை தருவதற்கு பதிலாக படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்.
இந்த திட்டங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு அரசு 24,000 கோடி செலவழிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள் அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். மாடுகளுடன் பேசுவதாக சொல்கிறார்கள் அதற்கு அறிவு இருப்பதால் பேசுகிறேன்.
இன்றைக்கு என்னை எதிர்த்து போராடும் அளவிற்கு எல்லா கட்சிகளும் வந்துவிட்டது.
பனைமரம் ஏறினால் இவன் இந்த சாதிக்காரன் என முத்திரை குத்துகிறார்கள் மரத்திற்கும் அரசு சாதியை புகுத்துகிறது. சாதியை வைத்து மக்களை பிளவுபடுத்தும் வேலை நடந்து வருகிறது.
ஆகவே நாம் அனைவரும் சாதியை மறந்து ஒன்றாக கை கொடுக்க வேண்டும்.
ரோடு சோ நடத்தி மக்களுக்கு டாட்டா காண்பிக்கும் அரசியல்வாதிகளுக்கு இன்னும் ஆறு மாதத்தில் மக்கள் டாடா காண்பிப்பார்கள்.
இந்த ஆட்சி அதிகாரம் இன்னும் 500 ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள் இருக்கப் போவதில்லை. இன்னும் சரியாக 6 மாதத்தில் மாறிவிடும். உலகில் மாறாது என்ற ஒரு சொல்லைத் தவிர அனைத்தும் மாறி விடும்.
வரலாற்றின் சக்கரங்கள் அனைத்தும் சுழன்று கொண்டே இருக்கும். கீழே இருப்பது மேலே வரும். சிம்மாசனத்தில் இருப்பவன் வீதிக்கு வருவான் வீதியில் இருந்து போராடுபவன் அந்த அதிகாரத்துக்கு செல்வான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் மணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளரை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 10 இளைஞர்கள் அங்கிருந்த பனைமரத்தில் வரிசையாக ஏறி நாம் தமிழர் கட்சியின் கொடியினை கையில் பிடித்தபடி நின்றனர். மேடையில் சீமான் உள்ளிட்டவர்கள் கள் அருந்தினர்.
- நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.
- தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை.
திருச்சி:
திருச்சி அ.ம.மு.க. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு முன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.
மோடி பிரதமராக வேண்டும் என 2024 ல் உருவாக்கப்பட்ட கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி அதில் நாங்கள், ஓ.பன்னீர் செல்வம் இணைந்தோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்த பின்பு அ.ம.மு.க. இருப்பிற்கு எந்த ஆபத்தும் வரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி பலப்பட்டுள்ளது. தி.மு.க.விற்கு தான் ஆபத்து வந்துள்ளது. எங்களின் ஒரே குறிக்கோள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான்.
அமித்ஷாவின் அந்த முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.
அ.தி.மு.க. தலைமைக்கும் எங்களுக்கு எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தேர்தல் வரை ஒதுக்கி வைத்துவிட்டு தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்.
அமித் ஷாவின் முயற்சிக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என வார்த்தைகள் விடாமல் நாங்கள் நாகரிகமான முறையில் கூட்டணி பலப்பட வேண்டும் என விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை யார் என்பது குறித்து அமித் ஷா என்ன பதில் கூறினாரோ அது தான் என் பதிலும்.
தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை.
டிசம்பரில் எல்லா கூட்டணிகளும் உருப்பெற்று விடும். அந்த நேரத்தில் நானே கூட்டணி குறித்து பதில் அளிக்கிறேன்.
தி.மு.க. ஆட்சி மீது கடுமையான கோபம் மக்களிடம் இருப்பதால் பயந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என கூறுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சிபில் ஸ்கோர் பிரச்சனையால் விவசாய கடன்கள் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் மனு அளித்தேன்.
* பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
* பயிர்க்கடன் வழங்குவதில் பழைய நடைமுறையையே கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* எங்கள் கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் யார் சேருவார்கள் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
* தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
* காங்கிரஸ் தலைமையில் த.வெ.க. கூட்டணியா? - எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






