என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்.
    • அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார் எடப்பாடி பழனிசாமி.

    திருச்சி:

    தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், துறையூர் தொகுதி, திருச்சி சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

    அதிமுக ஆட்சியின் திட்டங்களால் விவசாயிகள் நன்மை பெற்றுள்ளனர். திமுக ஆட்சியால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    விவசாயிகளின் பிரச்சனைகளை அனுபவ ரீதியில் உணர்ந்தவன் நான். இன்றும் என்னுடைய தொழில் விவசாயம்தான். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்தோம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்.

    அதிமுக தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி ரகுபதியை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால், அவர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாகச் சொல்கிறார். நான் நிரபராதி என்று விடுதலையாகி இங்கு நிற்கிறேன்.

    திமுக அமைச்சர்கள், முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களுக்கு தில்லு திராணியிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துங்கள்.

    கிட்னி விவகாரத்தில் எம்.எல்.ஏ. நக்கலாகப் பேசுகிறார். இப்படி நக்கலாக பேசவா ஓட்டு போட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? குடும்பக் கட்சியாக உள்ளது திமுக; மக்களுக்காக பாடுபடும் கட்சி அதிமுக மட்டுமே என தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • ஆம்புலன்ஸ் வந்தபோது அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மாநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் நேற்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து, இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மாலை 4 மணி அளவில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, அதனை தொடர்ந்து துறையூர் மற்றும் முசிறியிலும் பிரசாரம் செய்து வருகிறார்.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் திருச்சி மணப்பாறை பகுதியிலும், மாலை 6.30 மணி அளவில் திருச்சி மாநகரில் புத்தூர் நால்ரோடு பகுதியிலும், இரவு 8 மணி அளவில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகிலும் தீவிர பிரசாரம் செய்கிறார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. அதனை சுற்றுவளைத்த அதிமுகவினர் ஆம்புலன்ஸை விரட்டியடித்தனர்.

    ஆம்புலன்ஸ் வந்தபோது அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர்.

    ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இருப்பினும், திருச்சி துறையூரில் விபத்தில் சிக்கியவரை மீட்க வந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

    • அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றிபெறச் செய்ய முழுவீச்சில் களம் இறங்க வேண்டும்.
    • பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் விழாக்கோலம் கொண்டுள்ளது.

    திருச்சி:

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.

    கடந்த மாதம் 7-ந் தேதி கோவை மேட்டுப் பாளையத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பின்னர் சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் 109 சட்ட மன்ற தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்த, எடப்பாடி பழனிசாமி நேற்று 3 நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வருகை தந்தார்.

    விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த இந்த பிரசாரக் கூட்டங்களில் எழுச்சி உரை ஆற்றினார்.

    பின்னர் இன்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தன்யார் ஓட்டலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதி நிலவரம் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகம் குறித்து அவர் ஆலோசனை வழங்கினார்.

    மேலும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரசாரங்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும், பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி தேர்தல் பணி ஆற்ற வேண்டும்.

    அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றிபெறச் செய்ய முழுவீச்சில் களம் இறங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மேலும் 2-வது நாளாக இன்று மாலை 4 மணிக்கு மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணச்ச நல்லூர் கடை வீதியிலும், மாலை 5.30 மணிக்கு துறையூர் பஸ் நிலையம் அருகாமையிலும், இரவு 7 மணிக்கு முசிறி கைகாட்டி பகுதியிலும் எடப்பாடி பழனிசாமி திறந்தவேனில் பிரசாரம் செய்கிறார்.

    இதற்கான முன்னேற்பாடுகளை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    மூன்றாவது நாளாக நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மணப்பாறை பஸ் நிலையம் அரு காமையிலும், மாலை 5.30 மணிக்கு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி புத்தூர் நான்கு ரோடு, இரவு 7 மணிக்கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு உரையாற்றி தமது 3 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.

    பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் விழாக்கோலம் கொண்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொடி, தோரணங்கள் பிளக்ஸ் பேனர்கள் வைத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் வருகை தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம் என்றார்.

    திருச்சி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி வழங்கி, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சி மாநகராட்சியில் மின்கட்டணம் 67% உயர்வு, வரிகளையும் 100 முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு.

    விலைவாசியால் மக்கள் படும் துன்பம் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய் என்ன விலை என்ன… இப்போது என்ன விலை என்று ஒப்பிட்டுப் பாருங்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கி, அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களுக்காக திமுக ஆட்சி செய்யவில்லை, வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்கிறது. இந்த குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல் இது. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பேசவில்லை, யதார்த்த உண்மையைச் சொல்கிறேன். திமுக குடும்பத்தைத்தான் அரசாங்கமாகப் பார்க்கிறார்கள்.

    நாடு சிறந்து வளர கல்வி வளர்ச்சி முக்கியம். எனவே அதிகமாக நிதி ஒதுக்கி கல்வியில் புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தினோம். அதிமுக ஆட்சியில்தான் கற்போர் எண்ணிக்கை அதிகரித்தது. அதிமுகவின் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுகவினால் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாவது கொண்டுவர முடிந்ததா?

    67 கலைக்கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019லேயே அடைந்தோம்.

    ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், புத்தகப்பை, சைக்கிள், விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மாவின் எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் ரூ.7300 கோடி நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது.

    கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து அதனை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.

    ஏழைப் பெண்களின் பொருளாதார சூழலால் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் 6 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுசேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். ஏழைகளுக்கான திட்டங்களை நிறுத்தியதில் தான் திமுக சாதனை படைத்திருக்கிறது. மீண்டும் அந்த திட்டங்கள் எல்லம் தொடரும்.

    கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இனி ஏழை மக்கள் வீடு கட்டவே முடியாத அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. இரவில், கனவில் வேண்டுமானால் வீடு கட்டலாம். தேர்தல் அறிக்கையில் கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் அவற்றை இணைப்பேன் என்றனர், ஆனால் செய்யவில்லை. ஏனெனில் எல்லாவற்றில் இருந்தும் கமிஷன் வருது, காசு வந்தால் திமுகவுக்கு போதும்.

    சமீபத்தில் எங்களுக்குக் கிடைத்த செய்தி, ஜல்லி, எம்.சாண்ட் உரிமையாளர்களிடம் ஒரு டன்னுக்கு 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் வாய்மொழி உத்தரவிட்டதாகத் தகவல். எப்படி மக்களால் இதை தாக்குப்பிடிக்க முடியும்? இந்த ஆட்சி மீண்டும் வரப்போவதில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது, எரிகிற வீட்டில் பிடுங்குவது மிச்சம் என்று கொள்ளையடித்து வருகின்றனர்.

    நான் முதல்வரானபோது, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி பெரும்பான்மை நிரூபிக்கும் நாளன்று சட்டமன்றத்தில் கூச்சல் போட்டு டேபிளில் ஏறி டான்ஸ் ஆடினார்கள். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தனர். பெரும்பான்மை நிரூபித்த பின் அதனை ஏற்றுக்கொள்ளாத ஸ்டாலின் சட்டையைக் கிழித்துவிட்டு நடந்தார். அதிமுக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். அப்போது சட்டையுடன் வேட்டியையும் கிழித்துக்கொண்டு சாலையில் நடக்கப் போகிறார்.

    கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் என 7 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு கொடுத்தோம். தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம்.

    அதிமுக அரசு அமைந்ததும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கையை ஏற்று, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ரூ.75 ஆயிரம் மானியமாக கொடுக்கப்படும்.

    சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம், ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்தோம். இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிட்டோம்,

    இதேபோல கிறிஸ்தவ மக்களுக்கு, கிறிஸ்தவ பெண்கள் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கினோம். ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு 38 ஆயிரமாக நிதியுதவி உயர்த்தி வழங்கினோம், பின்னர் முழு மானியம் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து அதனைச் செய்யவில்லை.

    கிறிஸ்தவ, இஸ்லாமியப் பெருமக்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்தது அதிமுக அரசு. 31 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மத, ஜாதி சண்டை இல்லை, தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது.

    திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பலதிட்டங்களை நிறைவேற்றினோம், திருச்சி மலைக்கோட்டை நுழைவுவாயிலை சீரமைப்பு செய்தோம், புராதன தன்மையுடன் பூங்கா 39 கோடியில் தொடங்கினோம். திருச்சி மாநகரில் 16 பூங்காக்களை உருவாக்கினோம், வெள்ள பாதிப்பைத் தடுக்க உய்யகொண்டான் கால்வாய் 18 கோடியில் சீரமைக்கப்பட்டது.

    திருச்சி மாநகரில் எல்.இ.டி மின்விளக்குகள் பொருத்தப்பட்டது, சத்திரம் பேருந்து நிலையம் 28 கோடியில் மேம்படுத்தப்பட்டது. 19 கோடியில் பன்னாட்டு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது, 90% பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கப்பட்டது. திருச்சியில் பழைமையான தண்ணீர் தொட்டிகள், குழாய்களை சீரமைக்க அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டு, தற்போது அத்திட்டம் 2014கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதுவும் அதிமுக ஆட்சியில்தான் ஆரம்பிக்கப்பட்டது.

    மறைந்த தியாகராஜ பாகவதருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டது, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஆரம்பிக்கப்பட்டு 90% பணிகள் முடிவடைந்து, திமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கப்பட்டது. மறைந்த வ.உ.சி.க்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்தார். அதிமுக ஆட்சியில் தான் தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

    நீங்கள் கொடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும் கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டால் அவர்களின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின் என்று முடித்தார்

    • பஞ்சப்பூரில் புதிதாக மார்க்கெட் கட்டுவதால் காந்தி மார்க்கெட் மாற்றப்படாது.
    • காந்தி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ. 50 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் இன்று அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பஞ்சப்பூரில் புதிதாக மார்க்கெட் கட்டுவதால் காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. காந்தி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ. 50 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட உள்ளது. காந்தி மார்க்கெட் அங்கே தான் இருக்கும்.

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அங்கிள் என விமர்சனம் செய்துள்ளாரே என கேட்டதற்கு?

    அவருடைய தராதரம் அவ்வளவுதான். ஒரு மாநில முதலமைச்சரை, பெரிய கட்சியின் தலைவரை, 40 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவரை நேற்று அரசியலுக்கு வந்தவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதற்கு மக்கள் நல்ல பதில் சொல்வார்கள்.

    நாங்களும் தேர்தலில் சரியான பதில் சொல்வோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. 10 பேர் 50 பேர் கூடிட்டாங்க என்பதற்காக எது வேணாலும் பேசுவது சரியாக இருக்குமா? சரியாக இருக்காது என கோபமாக பதிலளித்தார்.

    • பல்வேறு அமைப்பு சார்ந்த பிரதிநிதிகளை சந்தித்து உரையாட உள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருச்சி:

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சி பயணத்தை கடந்த மாதம் 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார்.

    பின்னர் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 25-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.

    நாளை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணிக்கு திறந்த வேனில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    பின்னர் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் மாலை 5.30 மணிக்கும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் லால்குடியில் இரவு 7:00 மணிக்கும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    நாளை மறுநாள் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணச்சநல்லூர் கடை வீதியில் மாலை 4:00 மணிக்கும், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் பேருந்து நிலையம் அருகாமையில் மாலை 5.30 மணிக்கும்,

    முசிறி சட்டமன்ற தொகுதியில் முசிறி கைகாட்டி அருகாமையில் இரவு 7 மணிக்கும் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக வருகிற 25-ந் தேதி திங்கட்கிழமை மணப்பாறையில் மாலை 4 மணிக்கும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி புத்தூர் நான்கு ரோட்டில் மாலை 5.30 மணிக்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் முன்பு இரவு 7 மணிக்கும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.

    அவரை வரவேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் மற்றும் அலங்கா ரவளைவுகள் கொடி தோரணங்கள் கட்டி வருகின்றனர்.

    இந்த மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சார்ந்த பிரதிநிதிகளை சந்தித்து உரையாட உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் 9 இடங்களிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி, மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    முன்னதாக நாளை பிற்பகல் திருச்சி வருகை தரும் எடப்பாடி பழனிசாமி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறார்

    மூன்று நாட்களும் அதே விடுதியில் தங்கி இருந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

    • தமிழகத்தில் இடைநிற்றல் 7.7 சதவீதமாக குறைத்துள்ளோம்.
    • காலை உணவு திட்டத்தை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று நிருபர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக பள்ளிக்கல்வி துறை நலிவடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் பல தொழில்நுட்பங்களை கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. தமிழக மாணவர்கள் உலக அளவில் சாதனை புரிந்து வருகிறார்கள.

    தமிழகத்தில் தொடக்க கல்வி அளவில் இடைநிற்றல் இல்லாத நிலைதான் நிலைமை வருகிறது. மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய அளவில் இடைநிற்றல் சதவீதம் 14 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் இடைநிற்றல் 7.7 சதவீதமாக குறைத்துள்ளோம்.

    மாநில கல்வி கொள்கையை பொறுத்தவரை அனைவருக்குமான கல்வியை கொண்டு சேர்த்துள்ளோம். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி கல்வி துறையில் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் செயல்பட்டு வருகிறோம். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறோம்.

    பள்ளி கட்டிடங்களை சீரமைத்து வருகிறோம் பள்ளி கட்டிடங்கள் இல்லாத இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இப்படி இருக்க கூடிய நிலையில் எதை வைத்து அன்புமணி ராமதாஸ் பள்ளிக்கல்வித்துறை நலிவடைந்துள்ளதாக கூறுகிறார் என்பது தெரியவில்லை. அதை அவர் விளக்க வேண்டும்.

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. காலை உணவு திட்டத்தை ஜனாதிபதி பாராட்டியுள்ளார். அரசியல் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்திற்காக பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க மறுத்து வரும் நிலையில் அதற்காகத்தான் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுமே தவிர நம் தலையில் நாமே மண்ணள்ளி போட்டுக்கொள்ளும் வகையில் அன்புமணி ராமதாஸ் பள்ளிக்கல்வித்துறை நலிவடைந்துள்ளது என்கிற கருத்தை கூறக்கூடாது.

    ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் கல்வி சார்ந்து விமர்சனங்களை வைக்கும் போது அதில் உண்மைத் தன்மை இருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்போம். பள்ளி கல்வித்துறை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வைக்கும் விமர்சனங்களையும் கண்டனங்கள் குறித்தும் எங்களுடைய ஆய்வுக்கூட்டங்களில் விவாதிப்போம்.

    தவறு இருந்தால் நிச்சயமாக அதை திருத்திக் கொள்வோம். பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை தொடர்ந்து பல்வேறு முறைகளில் வழங்கி வருகிறோம்.

    ஆம்புலன்ஸ் என்பது உயிர் காக்கக்கூடியது. அதனுடைய முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கக் கூடாது. அவர் பிரசாரக் கூட்டத்தில் நாங்கள் ஏன் ஆம்புலன்ஸை அனுப்பி வைக்கப் போகிறோம்? முன்னாள் முதல்வராக இருந்தவர் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்க கூடாது.

    இவ்வாஅ அவர் கூறினார்.

    • மனிதனும் 3 நாள் பட்டினியாக இருந்தால் அந்த நாயை விட வெறிபிடித்தவனாக மாறி விடுவான்.
    • நாய்களை அடைக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும்.

    தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.

    அந்த பேரணியில் பங்கேற்று பேசிய பிரியா என்பவர், "பசியினால் தான் நாய் மனிதனை கடிக்க துரத்துகிறது. சாப்பிடாமல் உங்களால இருக்கமுடியுமா? நாய் 3 நாள் சாப்பிடாமல் இருக்கிறது. மனிதனும் 3 நாள் பட்டினியாக இருந்தால் அந்த நாயை விட வெறிபிடித்தவனாக மாறி விடுவான். நாய்களுக்கான கருத்தடையை ஒழுங்காக செய்யுங்கள். நாய்களை அடைக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும். நாய்க்கு சாப்பாடு போடுங்கள். இல்லையென்றால் நாய்க்கு வெறி பிடிக்க தான் செய்யும்" என்று தெரிவித்தார்

    • தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
    • தெருநாய்களுக்கு ஆதரவாக திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்

    டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.

    அந்த பேரணியில் பங்கேற்று பேசிய பெண் ஒருவர், "தெருநாய்க்கு ஒரு பிஸ்கட் போட்டால் காலம் முழுக்க அந்த நாய் வாலாட்டி கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட நாயை அடைக்க வேண்டும் என்று சொல்வது மனிதாபிமானமா? தெருநாய்கள் மனிதர்களை கடிக்கிறது என்று கூறுகிறீர்களே? எதாவது ஒரு மனிதன் நாயை அடித்து உதைப்பதால் தான் இன்னொரு மனிதனை நாய் கடிக்கிறது. ஒரு மனுஷன் செஞ்ச கேவலமான செயலால்தான், தற்காப்புக்காக இன்னொரு மனுஷனை நாய் கடிக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மனிதாபிமானத்தை கற்றுக்கொடுக்க வில்லை என்றால் யார் கற்று கொடுப்பது? நாய்கள் தற்காத்து கொள்ள தான் மனிதர்களை கடிக்கிறது" என்று தெரிவித்தார். 

    • தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது
    • தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு

    டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.

    • சென்னையில் இருந்து திருச்சிக்கு தற்போது ரூ.6404 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • பெங்களூருக்கு திருச்சியில் இருந்து கட்டணமாக தற்போது ரூ.5234 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, புதுடெல்லி போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக விமான கட்டணங்கள் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் திருச்சியில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து திருச்சிக்கும் விமான கட்டணமாக ரூ.2279 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.6404 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோன்று திருச்சியில் இருந்து ஹைதராபாத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.3575 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.6205 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து மும்பைக்கு கட்டணமாக ரூ.4826 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.8,134 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோன்று பெங்களூருக்கு திருச்சியில் இருந்து கட்டணமாக ரூ.2275 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.5234 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்த பின்னர் இந்த கட்டண உயர்வு சீராகும் என தெரிகிறது.

    • ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை ரிலீசாகிறது.
    • கூலி படத்தில் நாகார்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    கூலி திரைப்படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று திருச்சி ரஜினி ரசிகர்கள் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    விநாயகர் கோவிலுக்குள் கூலி படத்தின் ரஜினி புகைப்படங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ரஜினி பேனருக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு பூசணிக்காய் உடைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    மேலும் கூலி படம் நாளை வெளியாவதை ஒட்டி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    ×