என் மலர்
திருச்சிராப்பள்ளி
- மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன.
திருச்சி:
வன விலங்குகளில் உருவத்தில் பெரிய அளவில் இருந்தாலும் யானைகள் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான ஓர் உயிரினமாக உள்ளது. அதனால்தான் அவை கோவில்களில் கடவுளுக்கு அடுத்தபடியாக ஆன்மிக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பது பழமொழி.
ஆனால் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் என்றாலும் சரி, தனியார்களால் பராமரிக்கப்படும் யானைகள் ஆனாலும் சரி அவற்றின் முதுமை காலம் என்பது அவற்றுக்கு மிகவும் சோதனையான காலமாகவே அமைந்துவிடுகிறது. வயது முதிர்வின் காரணமாக யானைகள் வியாதிகளால் உடல் நலிவுறும்போது அவற்றை பராமரிக்க முடியாமல் யானைகளின் உரிமையாளர்களும், பாகன்களும் நிலை தடுமாறி விடுகிறார்கள். காரணம் உருவத்தில் பெரியதாக இருப்பதால் அவற்றுக்கு அதிக அளவில் உணவு தேவைப்படுவது போல், மருத்துவ சிகிச்சைக்கும் அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த பிரச்சனையின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் எம்.ஆர்.பாளையம் என்ற இடத்தில் வயதான யானைகளை பராமரிப்பதற்காக யானைகள் மறுவாழ்வு மையம் வனத்துறையால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட 9 யானைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினரால் நடத்தப்படும் இந்த மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இங்குள்ள யானைகளில் 71 வயது கோமதி, 60 வயது சுமதி, 64 வயது சுந்தரி, 66 வயது இந்திரா ஆகியவை தசைபிடிப்பு காரணமாக கால்வலியால் அவதிப்பட்டு வருகின்றன. இந்த யானைகளின் கால்வலியை போக்குவதற்காக வனத்துறை சார்பில் மறுவாழ்வு மைய வளாகத்தில் 'ஹைட்ரோதெரபி' எனப்படும் நீர் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு சிறப்பு குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு 4 யானைகளும், தினமும் அவற்றின் பாகன்கள் மற்றும் அவற்றின் உதவியாளர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் நீராட வைக்கப்படுகின்றன. மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன. அவை குளத்தில் நீராடி மகிழ்கின்றன.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'யானைகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் இந்த குளத்தில் நிரப்பப்படுகிறது. குளத்து நீரால் அளிக்கப்படும் சிகிச்சையின் மூலம் கால்வலியால் அவதிப்பட்ட யானைகளின் நடவடிக்கையில் சிறிது மாற்றத்தை காண முடிகிறது' என்றனர்.
- 45 இடங்களில் ஏதாவது ஒன்றில் விஜய் பேசுவதற்கு அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
- ரோடு ஷோ நடத்த போலீஸ் அனுமதி அளிக்கவில்லை.
திருச்சி:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.
ஏற்கனவே விக்கிரவாண்டி, மதுரை ஆகிய இடங்களில் இரண்டு மாநாடுகளை நடத்தி அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இதை தொடர்ந்து மக்களை நேரடியாக சந்திக்கும் அவரது பிரசார சுற்றுப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தை தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் இருந்து வருகிற 13-ந்தேதி தொடங்கி அதே நாளில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி வருகை தந்தார். பின்னர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து வருகிற 13-ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலைய ரவுண்டானா, மேலபுதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை ஆகிய இடங்கள் வழியாக ரோடு ஷோ செல்வதற்கும், சத்திரம் பஸ் நிலையத்தில் சிறப்புரையாற்றுவதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என மனு கொடுத்தார்.
ஆனால் இதற்கு போலீஸ் தரப்பில் திருச்சி மாநகரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு என அனுமதிக்கப்பட்ட 45 இடங்களில் ஏதாவது ஒன்றில் விஜய் பேசுவதற்கு அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ரோடு ஷோ நடத்த போலீஸ் அனுமதி அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திருச்சி மரக்கடை பகுதிக்கு சென்று விஜய் பேசுவதற்கான இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு திருச்சி வருகின்றனர். பின்னர் திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து திருத்தப்பட்ட மனுவை அளிக்க உள்ளனர்.
- அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- செந்தண்ணீர்புரம், விண்நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
திருச்சி:
அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர்.நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார்க்கோட்டை,
கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் இன்டஸ்ட்ரியல் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், விண்நகர் ஆகிய இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
- ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது.
திருச்சி:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று (செவ்வாய்க்கிழமை) 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.
மைசூருவில் இருந்து நேற்று நண்பகல் 12 மணி அளவில் சென்னை வருகை தந்த அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விருந்தளித்து உபசரித்தார்.
பின்னர் இன்று (புதன்கிழமை) காலை 9:30 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமான மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். தொடர்ந்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அதே ஹெலிகாப்டரில் மாலை 4 மணிக்கு திருச்சி கொள்ளிடம் யாத்திரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதையை அளிக்கப்படுகிறது.
அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோவிலுக்குள் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்கிறார். தொட ர்ந்து அவர் கோவில் வளாகத்தை சுற்றி பார்க்கிறார். மேலும் கோவிலில் உள்ள சிற்பங்களையும் அவர் பார்வையிடுகிறார்.
தரிசனம் முடிந்த உடன் அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மாலை 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
- 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டது.
180 பயணிகளுடன் இன்று காலை 4.45 மணிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- வெடிகுண்டு மிரட்டல் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- சோதனையால் அலுவலகப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்ற பெயரில் இருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் நான்கு தளங்களிலும் ஒவ்வொரு அலுவலக அறையாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. திருச்சிக்கு நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர உள்ள நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது காவல் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டல் திருச்சி கலெக்டர் அலுவலக மெயிலுக்கு வந்தாலும், அதில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே மனநிலை பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ள நபர் மிரட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த வெடிகுண்டு சோதனையால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்த சோதனையால் அலுவலகப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
- தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருச்சி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10.55 மணிக்கு வருகிறார்.
அவரை மாவட்ட கலெக்டர் வே.சரவணன், அமைச்சர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து, பகல் 12.10 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
பின்னர், அவர் திருவாரூரில் இருந்து மாலை 4.30-க்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் மாலை 5.20-க்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்யும் திரவுபதி முர்மு, மாலை 6 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். திருச்சி விமான நிலையத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை, ரெங்கநாதர் கோவில் மற்றும் அவர் காரில் செல்லும் வழிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
- டிப்பர் லாரியின் உரிமையாளர் மற்றும் லாரி டிரைவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முருகூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண் ராஜ் (23). இவரது நண்பர் விக்னேஷ் (20). இவர்கள் இருவரும் சவுண்ட் சர்வீஸ் அமைப்பது மற்றும் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை துறையூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். ஆத்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது முன்னால் டிப்பர் லாரி சென்றது.
இருவரும் அந்த லாரியை முந்தி செல்வதற்கு முயற்சி செய்தனர். இந்த வேளையில் எதிர் திசையில் கிரேன் வாகனம் ஒன்று வந்ததால், தங்களுடைய இருசக்கர வாகனத்தை இடது புறமாக திருப்பினர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரியில் மோதி சரண் ராஜ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை அடுத்து டிப்பர் லாரி டிரைவர், லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார். இச்சம்பவத்தை அறிந்த துறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிப்பர் லாரியின் உரிமையாளர் மற்றும் லாரி டிரைவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திரை உலகில் 50 ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார்.
- நடிகர் சங்கமோ, அதன் நிர்வாகிகளோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது.
திருச்சி:
தே.மு.தி.க. பொத்ச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களின் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் 2-வது கட்டம் வருகிற 5-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இடம் மற்றும் தேதிகளை விரைவில் தலைமை அறிவிக்கும். இந்த ரத யாத்திரை மக்கள் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது.
திருச்சிக்கு வெகு விரைவில் வர இருக்கிறோம். நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பான ஆதரவை அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை தே.மு.தி.க. வரவேற்கிறது.
அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும்போது, நாட்டுக்கும் மக்களுக்கும் இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும் என நம்புகிறோம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் வேறு. எங்களது பயணம் வேறு.
நாங்கள் காலையில் பூத் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கிறோம் மாலையில் ரத யாத்திரை நடத்துகிறோம். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும். கூட்டணி தொடர்பாகவும், யாருடன் கூட்டணி என்பதையும் வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிப்போம்.
இப்போது கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறோம். எம்.ஜி.ஆருக்கு பின்னர் மக்கள் தலைவராக திகழ்ந்தவர் விஜயகாந்த். ஆகவே அவரைப்பற்றி அரசியல் கட்சி தலைவர்களாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் பேசாமல் இருக்க முடியாது. அது எங்களுக்கு சந்தோஷம்தான்.
விஜய் கட்சி மாநாட்டில் ரேம்ப் வாக்கில் குதித்து ஏறும்போது பவுன்சர்கள் தொண்டர்களை தள்ளி விட்டது எல்லா கட்சியிலும் நடப்பது தான். திட்டமிட்டு யாரும் செய்வதில்லை. காவல்துறைக்கு அடையாளமாக திகழ்ந்தவர் விஜயகாந்த்.
ஆனால் இன்றைக்கு தே.மு.தி.க. கொடி பிளக்ஸ் வைக்க அனுமதி மறுத்ததாக எங்கள் மாவட்ட செயலாளர் கூறினார். அனுமதி கொடுத்தால் எல்லாருக்கும் அனுமதி கொடுங்கள். இல்லை என்றால் யாருக்கும் அனுமதி கொடுக்காதீர்கள்.
திரை உலகில் 50 ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார். அவருக்கு முதல் ஆளாக நானும் தேமுதிகவும் வாழ்த்து தெரிவித்தோம். 50 ஆண்டுகள் கதாநாயகனாக நடிப்பது இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை. விஜயகாந்த் இருந்திருந்தால் அவருக்கு விழா எடுத்திருப்பார்.
நடிகர் சங்கமோ, அதன் நிர்வாகிகளோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அது அவர்களின் விருப்பம்
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், மண்டல பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. செந்தில்குமார், மாவட்டச் செயலாளர்கள் டி.வி.கணேஷ், சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- சீமான் திருச்சி சமயபுரத்தில் கள் இறக்க அனுமதி கோரி பனைமரம் ஏறி போராட்டம் நடத்தினார்.
- தேனியில் கால்நடைகளுக்காக பேசுவேன் என்று ஆடு, மாடுகளுடன் மாநாடு, அதன் பின்னர் மரங்கள் மாநாடு நடத்தினார்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்தவ பெருமக்களுடன் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள சுமங்கலி திருமண மண்டபத்தில் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
உலக தமிழ் கிறிஸ்தவ இயக்கம் ஏற்பாடு செய்து உ ள்ள இந்த நிகழ்ச்சியில் சீமான் கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் இஸ்லாமிய அமைப்பினர் ஏற்பாடு செய்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது தங்களை சிறுபான்மையினர் என ஏன் அழைக்கிறார்கள் என பலரும் எழுப்பிய கேள்விக்கு அவரது பாணியில் புதிய விளக்கம் அளித்திருந்தார். ஏற்கனவே சீமான் திருச்சி சமயபுரத்தில் கள் இறக்க அனுமதி கோரி பனைமரம் ஏறி போராட்டம் நடத்தினார். அதன் பின்னர், தேனியில் கால்நடைகளுக்காக பேசுவேன் என்று ஆடு, மாடுகளுடன் மாநாடு, அதன் பின்னர் மரங்கள் மாநாடு நடத்தினார்.
இதன் மூலம் மக்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பும் முயற்சியில் சீமான் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
- போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
திருச்சி:
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3-ந்தேதி காலையில் நடைபெற உள்ளது.
விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 3-ந் தேதி காலை டெல்லியில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் டில் பகல் 12.30 மணியளவில் வந்து இறங்குகிறார்.
பின்னர் அங்கு மதிய உணவிற்கு பின்னர் 2.30 மணி முதல் 3.30 மணி வரையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர் மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வருகிறார். ஸ்ரீரங்கத்தில் பிரத்யேக ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து காரில் திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார்.
- அதிமுக கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றுவளைத்த அதிமுகவினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அதிமுக தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.






