என் மலர்
நீங்கள் தேடியது "elders home"
- தமிழகம் முழுவதும் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ரூ.10 கோடி செலவில் 25 இடங்களில் கட்டப்பட்டுள்ள மூத்தோர்களுக்கான அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அதன்படி, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா 2, சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- எதிர்வீட்டில் வசிக்கும் எலட்ரீசியின் சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்விசிறியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய சென்றபோது கதவை மூடிக்கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
நாமக்கல்லில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வீட்டில் வசிக்கும் எலட்ரீசியின் சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்விசிறியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய சென்றபோது கதவை மூடிக்கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், மூதாட்டியை கொலை செய்துவிட்டு தப்பியோட முயற்சித்தபோது கொலையாளிகை பிடித்து போலீசாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
- முதியோர் இல்லத்தில் சேர்ப்பு
- பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் ஆதரவற்ற முதியவர்கள் சுற்றித் திரிகின்றனர்.
மேலும் சிலர் அங்கேயே படுத்து தூங்குகின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆதரவற்ற முதியவர்களை ரெயில் நிலைய பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து இன்று காலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் பிளாட்பாரங்களில் சுற்றித்திரிந்த முதியோர்களை பிடித்தனர்.
விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த குப்பம்மாள் (வயது 65)திருவண்ணாமலை சேர்ந்த குப்புசாமி (70) ராஜேந்திரன்(58)ஆரணி மீனா (50) பெரம்பலூர் மணிகண்டன் (40) காஞ்சிபுரம் ரேகா (50) செங்கல்பட்டு பொன்னம்மாள் (70)சரஸ்வதி (45) ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் முதியவர்களுக்கு யாரும் ஆதரவு இல்லை என தெரிய வந்தது. வேலூர் முதியோர் இல்லத்தில் அவர்களை சேர்த்தனர்.






