என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு
    X

    புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு

    • விமானிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
    • போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சேலத்தில் இருந்து இன்று மதியம் ஒரு பயிற்சி விமானம் புறப்பட்டு சென்றது. திருச்சி- புதுக்கோட்டை சாலையில் நார்த்தாமலை அருகே அந்த விமானம் சென்றது. திடீரென்று அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இதனால் விமானிகள் அதை சாலையில் தரை இறக்கினர். இதில் விமானிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. திடீரென்று சாலையில் விமானம் தரை இறங்கியதல பரபரப்பு உண்டானது.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×