search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த மின்சார டிரான்ஸ்பார்மர்- மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி
    X

    நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த மின்சார டிரான்ஸ்பார்மர்- மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி

    • டிரான்ஸ்பார்மர் நேற்று நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றி எரிந்தது.
    • தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    சென்னை:

    தேனாம்பேட்டை பி.பி.கோவில் அருகே உள்ள பாபு தெருவில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் நேற்று நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றி எரிந்தது.

    டிரான்ஸ்பார்மரில் பிடித்த தீ அருகில் உள்ள மாடு கட்டும் இடத்திற்கும் பரவியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    உரிய நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×