என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையின் கதவை உடைத்து ரூ.15 ஆயிரம் இரும்பு பொருட்கள் திருட்டு
- சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
- மர்மநபர்கள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை நீலகிரி பஞ்சாயத்து செம்பருத்தி தெருவை சேர்ந்தவர் பத்மநாதன் (வயது 38).
இவர் தஞ்சை ரகுமான் நகரில் பித்தளை ,இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.
இந்த நிலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த பத்மநாதன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது குறித்து அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்