என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • சர்க்கரை ஆலை ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் அரவை தொடங்கப்படும்.
    • உடனடியாக சர்க்கரை ஆலை திறந்து அரவை தொடங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார்.

    இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் அரவை தொடங்கப்படும்.

    ஆனால் நவம்பர் மாதம் முடிவடையும் இந்த தருவாயில் கூட ஆலை திறக்கப்படாமல் உள்ளது. உடனடியாக சர்க்கரை ஆலை திறந்து அரவை தொடங்க வேண்டும்.

    காலதாமதமாக திறக்கப்பட்டால் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    உடனடியாக ஆலையை திறக்க வேண்டும் . மேலும் தமிழக அரசு அறிவித்த ரூ.195 டன் ஒன்றிக்காண ஊக்கத்தொகை அரசாணை வெளியீட்டும் தற்போது வரை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் ரூ.26 கோடி வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.

    அப்போதுதான் அறுவடை செய்யக்கூடிய விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மேலும் தஞ்சை மாவட்டத்தில் காவிரி நீர் பாயாத ஏரி பாசனத்தை நம்பியுள்ள செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி உள்ளது .

    ஆனால் தற்போது வரை ஏரிகள் நிரம்பாததால் நிலத்தடி நீரை நம்பி விவசாயிகள் உள்ளதால் உடனடியாக ஆழ்குழாய் பாசனத்திற்காக மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும்.

    செங்கிப்பட்டி பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர்கள் கோவிந்தராஜ் உள்பட ஏராளமான விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

    • படுகாயம் அடைந்த விக்னேஷ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள கீழக் குறிச்சியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32) இவர் சம்பவத்தன்று நடந்த தகராறில் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் விக்னேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாத போலீசாரை கண்டித்து கீழக்குறிச்சி கிராமத்தினர் மதுக்கூர்-மன்னார்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நீலகண்டன், தாசில்தார் சுகுமார், மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது வழக்கில் தொடர்புடை யவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    அதன் பேரில் சாலை மறியலில் கைவிடப்பட்டது.

    இந்த சாலை மறியலால் மதுக்கூர்-மன்னார்குடி சாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தஞ்சை மாவட்டத்தில் நேற்று, இன்று விட்டு விட்டு மழை பெய்தது.
    • காலை 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 9 மணி வரை 1 மணி நேரம் பெய்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று முழுவதும் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சை, குருங்குளம், பாபநாசம், பேராவூரணி, கும்பகோணம், மதுக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டியது.

    இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன.

    இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இன்று காலையும் தஞ்சையில் மழை நீடித்தது.

    காலை 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 9 மணி வரை 1 மணி நேரம் பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் , வேலைக்கு செல்வோர் என பலர் நனைந்தப்படி சென்றனர்.

    இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பாதுகாப்பான இடத்தில் நின்றுவிட்டு மழை நின்றவுடன் வாகனங்களை ஓட்டி சென்றனர்.

    மேலும் பயணிகள் குடைப்பிடித்தப்படி பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    இதேப்போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பொழிந்தது.

    இன்று மாலை, இரவு நேரங்களிலும் மீண்டும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர் மழையால் மாவட்டத்தில் 1 கூரை வீடு, 2 ஓட்டு வீடு என 3 வீடுகள் பகுதியளவில் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 280 மி.மீ. மழை கொட்டியுள்ளது. அதிகபட்சமாக மதுக்கூரில் 35.80 மி.மீ.யும், கும்பகோணத்தில் 35 மி.மீ.யும் மழை பதிவாகியுள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    மதுக்கூர்-38.80, கும்பகோணம்-35, திருவிடைமருதூர்-22.60, குருங்குளம்-22, அய்யம்பேட்டை-19, தஞ்சாவூர்-18.50, அதிராம்பட்டினம்-18.20, பட்டுக்கோட்டை-18.

    • வேளாண் நிலம் பறிப்புக்காக நில ஒருங்கிணைப்பு சட்டமும் கொண்டு வந்துள்ளார்கள்.
    • செய்யாறு மூன்றாம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் ஏற்கனவே இரண்டு சிப்காட் அலகுகள் இருக்கும் போது மூன்றாவது சிப்காட் அலகு தேவையில்லாதது. அங்கு பணிபுரிபவர்களில் 30 சதவீதம் பேர் இந்திக்காரர்கள்.

    மூன்றாவது சிப்காட் அலகுக்காக தமிழ்நாடு அரசு அப்பகுதியில் 3174 ஏக்கரில் விளைநிலங்களை கைப்பற்றுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதில் விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

    பல தரப்பினர் எதிர்ப்புகளுக்குப் பிறகு ஆறு விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை நீக்கினார்கள். ஆனால் பொறியாளரும் தீவிர சாகுபடியாளருமான அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அரசு ரத்து செய்யவில்லை. தற்போது அருள் பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.

    சென்னை- சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக போராடியவர் அருள்.

    அதன் அடிப்படையில் அவர் மீது குண்டர் சட்டத்தை நீக்கவில்லை என தெரிகிறது.

    உடனடியாக அருள் மீது உள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

    திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது தடுக்கப்பட்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என கூறியது.

    ஆனால் ஆட்சிக்கு வந்த பின் அதற்கு நேர் எதிராக செயல்பட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக வேளாண் நிலங்களை பறிக்கிறார்கள்.

    மேலும் வேளாண் நிலம் பறிப்புக்காக நில ஒருங்கிணைப்பு சட்டமும் கொண்டு வந்துள்ளார்கள்.

    வேளாண்மையை அழித்து தொழிற்சாலைகளை பெருக்குவது கிராமங்கள் அளிப்பதாகும். மிகையான தொழிற்சாலை பெருக்கம் மண்ணையும் நீரையும் நஞ்சாக்கும்.

    எனவே நில ஒருங்கிணைப்பு சட்டத்தை நீக்க வேண்டும்.

    செய்யாறு மூன்றாம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். விவசாயிகளிடம் இருந்து பறித்த நிலங்களை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 30-ம் தேதி தஞ்சை ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பொருளாளர் மணிமொழியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பழ. ராஜேந்திரன், சாமி கரிகாலன், செயற்குழு வெள்ளாம் பெரம்பூர் துரை ரமேஷ், திருவாரூர் கலைச்செல்வன், ஜெயக்குமார், தமிழ் தேசியப் பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை , இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும்.
    • 15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி புதிய சம்பளம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்துக் கழகங்கள் தனது சேவையில் 50 ஆண்டுகால பொன்விழாவை கண்டுள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று சுமார் 90 ஆயிரம் பேர் உள்ளனர்.

    இவர்களுக்கு அரசு பொறுப்பேற்று வழங்கும் ஓய்வூதியம் கிடையாது. பிஎப் டிரஸ்ட் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தான் பெற்று வருகின்றனர்.

    இவர்களின் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பே ற்று வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15- வது ஊதிய ஒப்ப ந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி புதிய சம்பளம் வழங்க வேண்டும்.

    ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) மாநிலந்தழுவிய தொடர் முழக்க போராட்டம் திருச்சி போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெறுகிறது.

    இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட கும்பகோணம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, நாகப்பட்டினம் ஆகிய கழகங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அஞ்சலகங்களையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் கடந்து தலைமை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    சுவாமிமலை:

    காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளரும், கவுன்சிலருமான அய்யப்பன் தலைமை அஞ்சல் அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் பகுதி மக்கள் வெளியூர்களுக்கு கடிதம் அனுப்ப, சிறுசேமிப்பு பதிவு அஞ்சல்கள், பார்சல் அனுப்ப முதலிய சேவை களுக்கு அஞ்சலகங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கும்பகோணம் கடைவீதி, மேலக்காவேரி, காந்தி பூங்கா, கம்பட்ட விசுவநாதர் கீழவீதி, சவுராஷ்ட்ரா நடுத்தெரு ஆகிய பகுதிகளில் இருந்த கிளை அஞ்சலகங்கள் திடீரென மூடப்பட்டன.

    இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தபால் அனுப்ப வேண்டும் என்றால் நீண்ட தூரம் கடந்து மகாமகக்குளம் தலைமை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, ஏழை நடுத்தர மக்களுக்கு நலன் கருதி மூடப்பட்ட கிளைஅஞ்சல கங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • 4, 11-ந் தேதிகளில் சோமவார சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    காா்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சோம வார விரதம் கடைப்பிடித்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம்.

    இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் காா்த்திகை மாத முதல் சோம வாரமான நேற்று மாலை பெருவுடையாா் சன்னதி முன் 1008 சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    இதைத்தொடா்ந்து, 1008 சங்குகளில் நிரப்பப்ப ட்ட புனித நீரால் பெருவு டையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

    இதேபோல, பெரிய கோயிலில் வரும் 27-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11 ஆம் தேதிகளில் சோம வார சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது.

    • மொத்தம் 21 பெட்டிகளில் பேப்பர் ரோல் வந்தது.
    • ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.

    தஞ்சாவூர்:

    நாட்டில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மின்னனு வாக்கு பதிவு எந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து இறங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று வி.வி.பேட் கருவியில் பொருத்தப்படும் பேப்பர் ரோல் பெட்டிகள் பெங்களூரில் இருந்து லாரியில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது.

    இந்த பேப்பர் ரோலானது வி.வி.பேட் எந்திரத்தில் பொருத்தப்பட்டு யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை காண்பிக்கும் ஒப்புகை சீட்டாகும்.

    மொத்தம் 21 பெட்டிகளில் பேப்பர் ரோல் வந்தது.

    ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.

    இவைகள் லாரியில் இருந்து இறக்கி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    • 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
    • தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொ ருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

    இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து 1300 டன் யூரியா, காம்ப்ளக்ஸ், டிஏபி உரங்கள் சரக்கு ரயிலில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது.

    பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதே போல் தஞ்சையில் இருந்து கன்னியாகுமரிக்கு பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதற்காக 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    • 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை 45 ஆவது நாளில் தெளிக்கலாம்.
    • தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் நெற் பயிரில் இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்துமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை இணை இயக்குநா் (பொ) ஈஸ்வா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

    இது குறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:

    தஞ்சை மாவட்டத்தில் பருவ மழை விட்டு, விட்டு பெய்து வருவதால், சம்பா, தாளடி நெற் பயிரில் ஆங்காங்கே இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் தென்படுகிறது.

    இலை சுருட்டுப் புழுக்கள் இலையை மடக்கி, அடிப்பகுதியில் பச்சையத்தை சுரண்டி உண்பதால், இலைகள் வெண்மையாக தென்படும்.

    மேலும், இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் மடக்கப்பட்ட இலைகளுக்கு இடையில் காணப்படும்.

    தீவிர தாக்குதலின்போது நெல் வயல் முழுவதும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

    இலை சுருட்டுப்புழுத் தாக்குதல் உள்ள வயல்களில் விளக்கு பொறிகளை ஒரு ஏக்கருக்கு 2 இடங்களில் வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவா்ந்திழுத்து அழிக்கலாம்.

    பறவை இருக்கைகள் ஒரு ஹெக்டேருக்கு 40 - 50 எண்கள் அமைப்பதன் மூலம் புழுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

    தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதைத் தவிா்க்க வேண்டும்.

    5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை 45 ஆவது நாளில் தெளிக்கலாம்.

    மேலும், இலை சுருட்டுப்புழுவின் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல், அதாவது தூா் கட்டும் தருணத்தில் 10 சதவீதம் இலைகளில் தாக்குதல் அல்லது பூக்கும் தருணத்தில் 5 சதவீதம் இலைகளில் தாக்குதல் இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. அசாடிராக்டின் அல்லது 60 மி.லி. குளோரன்ட்ரனிலிப்ரோல் 18.5 சதவீதம் அல்லது 400 கிராம் காா்டாா்ப் ஹைட்ரோகுளோரைடு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 27 அடி உயரமுள்ள புதிய மரத்தேர் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • தற்போது அந்த காலை தேரின் மேற்பகுதியில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கரும்படு சொல்லியம்மை சமேத சாட்சிநாதசாமி கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் ரூ.55 லட்சம் செலவில் 27 அடி உயரமுள்ள புதிய மரத்தேர் அமைக்கும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த தேர் வடிவம் முழுவதும் அமைக்கப்பட்டு வருகிற மாசி மாதத்தன்று தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அலங்கார கால் வடிவ மைக்கும் பணி முடிந்து தற்போது அந்த காலை தேரின் மேற்பகுதியில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இதேபோல், திருச்சியில் உள்ள பிஹெச்எல் நிறுவனம் தேருக்கான சக்கரங்களை தயார் செய்து விட்டனர்.

    சக்கரங்கள் வந்தவுடன் அதனை தேரில் பொருத்தி வருகிற கார்த்திகை மாதம் கடைசி வாரத்தில் வெள்ளோட்டம் நடைபெறும் என கோவில் கண்கா ணிப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    • நாற்றுகள் வளர்ந்த இடங்களில் நடவுப்பணிகள் நடக்கிறது.
    • விவசாயிகள் மழைநீரை பயன்படுத்தி நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாபநாசம்:

    தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறும்.

    ஆனால் காவிரியில் முறையாக தண்ணீர் திறக்கப்படாததால் இந்தாண்டு நெல் உற்பத்தி குறைவான அளவிலே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் தற்போது விவசாயத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    தஞ்சையை அடுத்த பாபநாசம் பகுதியில் உழவுப்பணி, பாய் நாற்றாங்கால் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், நாற்றுகள் வளர்ந்த இடங்களில் நடவுப்பணிகள் நடக்கிறது.

    ஒரு சில வயல்களில் எந்திரம் மூலம் நாற்று நடவு செய்யப்பட்டு வருகின்றன.

    இப்பகுதிகளில் பாய் நாற்றங்கால் மூலம் பயிரிப்படும் நாற்றுகள் 20 முதல் 25 நாட்களுக்குள் நடவுக்கு தயாராகி விடுகிறது.

    தற்போது பம்பு செட் வசதியில்லாத விவசாயிகள் மழை நீரை பயன்படுத்தி நாற்றுகளை விலைக்கு வாங்கி நடவு பணிகளை செய்து வருகின்றனர்.

    இதுக்குறித்து முன்னோடி விவசாயி அயோத்தி கூறுகையில் நெல் சாகுபடிக்கு தேவையான உரம் போன்ற இடுபொருட்களையும் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.

    ×