search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேறும் சகதியுமாக காணப்படும் பகுதிக்கு தார்சாலை அமைக்கப்படுமா?
    X

    சேறும் சகதியுமாக காணப்படும் சாலை.

    சேறும் சகதியுமாக காணப்படும் பகுதிக்கு தார்சாலை அமைக்கப்படுமா?

    • இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
    • சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி தென்பாதி மாளிகை புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது பள்ளியின் அருகே கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசி நோய் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும் இவ்வழியே நடந்து செல்ல பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியு ள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடியாக தார் சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×