என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேலூர் அருகே பட்டாசு ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியது- டிரைவர் பலி
- சிவகாசியில் இருந்து பட்டாசு ஏற்றி கொண்டு ஒரு லாரி திருச்சி சென்று கொண்டிருந்தது.
- லாரி டிரைவர் புளியங்குடியைச் சேர்ந்த திருமலை குமார் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலூர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து பட்டாசு ஏற்றி கொண்டு ஒரு லாரி திருச்சி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி பாலம் அருகே 4 வழிச்சாலையில் சென்ற போது விபத்தில் சிக்கியது.
பட்டாசு லாரி முன்னால் சென்ற வாகனத்தின் மீதோ அல்லது சென்டர் மீடியினின் பக்கவாட்டிலோ மோதியதா? என்று தெரியவில்லை. இதில் லாரியின் முன்புறம் நொறுங்கியது. லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடியைச் சேர்ந்த திருமலை குமார் (42) படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகஜேந்திரன், ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரி டிரைவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து எப்படி நடந்தது? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்