search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா கும்பலால் வியாபாரி வெட்டிக்கொலை: தஞ்சையில் வணிகர்கள் கடையடைப்பு- ஆர்ப்பாட்டம்
    X
    கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்ட மார்க்கெட்.

    கஞ்சா கும்பலால் வியாபாரி வெட்டிக்கொலை: தஞ்சையில் வணிகர்கள் கடையடைப்பு- ஆர்ப்பாட்டம்

    • வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
    • வணிகர்கள் கடையடைப்பையொட்டி தஞ்சை கரந்தை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த கரந்தை ராஜாராமன் மடத்து தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 75). இவர் கரந்தையில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.

    கடந்த 9-ந் தேதி இரவு இவர் கடையில் இருந்தபோது கரந்தை ராஜாராமன் மடத்து தெரு ஹரிகரன்(21), கரந்தை பூக்குளம் பகுதி தினேஷ்(19) ஆகிய 2 பேரும் கஞ்சா போதையில் வந்து மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்க மறுத்த செந்தில்வேலை அவர்கள் அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர்.

    செந்தில்வேலை உடனடியாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் கரந்தை ஹரிகரன், தினேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் தஞ்சை கரந்தை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டது. இதன் காரணமாக கரந்தை கடைவீதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது.வணிகர்கள் கடையடைப்பையொட்டி தஞ்சை கரந்தை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×