search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    திருவொற்றியூரில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

    • கரண் பயன்படுத்தும் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
    • தற்கொலைக்கு முன்பு அவர் தனது செல்போனில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழித்தது ஏன்?என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், சேஷாசலாகிராமணி தெருவை சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் கரண் (வயது19). மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வந்தார். குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்ட இவர் இதற்கான பயிற்சியும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த கரண் தனது அறைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டியும் திறக்க வில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் கரண் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கரண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கரண் பயன்படுத்தும் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆனால் அதில் இருந்து வீடியோ, புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தம் அழிக்கப்பட்டு இருந்தன. கரண் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை.

    தற்கொலைக்கு முன்பு அவர் தனது செல்போனில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழித்தது ஏன்?என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×