search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் தனியார் கல்லூரி வளாகத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை
    X

    நெல்லையில் தனியார் கல்லூரி வளாகத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை

    • சக ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையை சேர்ந்தவர் ஜூலியஸ்குமார் (வயது41). கட்டிட தொழிலாளி. இவர் நெல்லை மாவட்டம் மேல திடியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக அங்கே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அவருடன் மேலும் சில தொழிலாளர்களும் பணியாற்றி வந்தனர்.

    இந்நிலையில் ஜூலியஸ்குமார் இன்று காலை அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜூலியஸ்குமாருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த சக ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×