search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்- ஜவுளி வியாபாரியால் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்
    X

    அண்ணாமலை

    மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்- ஜவுளி வியாபாரியால் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்

    • அண்ணாமலையின் ஒரு சிறுநீரகம் அவர் சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவருக்கும், மற்றொரு சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கண்கள் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
    • அண்ணாமலையின் உடல் உறுப்புதானத்தால் 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    சரவணம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது61).

    இவர் ஜவுளி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் தனது உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வந்தார்.

    கடந்த 7-ந்தேதி இவர் திருப்பூருக்கு துணிகள் எடுப்பதற்கு வந்தார். அங்கு துணிகளை எடுத்து கொண்டு மீண்டும் கோபி நோக்கி சரக்கு வேனில் சென்றார். வேன் மொடச்சூர் அருகே சென்ற போது, திடீரென விபத்தில் சிக்கியது.

    இதில் வேனில் இருந்த அண்ணாமலை பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து அண்ணாமலையின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் அவரது உறவினர்களிடம் தெரிவித்தனர்.

    உறவினர்கள் அண்ணாமலையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதனை தொடர்ந்து உரிய அனுமதியுடன் டாக்டர்கள் அண்ணாமலையின் உடல் பாகங்களை எடுத்தனர்.

    அண்ணாமலையின் ஒரு சிறுநீரகம் அவர் சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவருக்கும், மற்றொரு சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கண்கள் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புதானத்தால் 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    Next Story
    ×