search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியையை தாக்கி நகை பறிப்பு
    X

    ஆசிரியையை தாக்கி நகை பறிப்பு

    • கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் ஏழுமலையான் நகர் பகுதியை சேர்ந்தவர் ரதிகுமாரி. இவர் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணி செய்து வருகிறார். நேற்று இரவு அவர் மகளுடன் அருகில் தாய் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார். ஏ.ஏ.எம். நகர் அருகில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென ரதிகுமாரியை தாக்கி அவர் அணிந்து இருந்த நகையை பறித்தனர்.

    இதில் நகை அறுந்ததில் 3 பவுன் செயினுடன் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×