search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை ஐகோர்ட்டில் வக்கீல்கள், ஊழியர்கள், போலீசார் முகக்கவசம் அணிந்து வந்தனர்
    X

    மதுரை ஐகோர்ட்டில் வக்கீல்கள், ஊழியர்கள், போலீசார் முகக்கவசம் அணிந்து வந்தனர்

    • நீதிமன்றத்திற்கு வரும் பார்வையாளர்கள், காவல்துறையினர் தனிவழி அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
    • வழக்குக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும்.

    மதுரை:

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று (20-ந் தேதி) முதல் கோர்ட்டுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

    வழக்குக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளை நீதிபதி பிரகாஷ் நீதிமன்றத்தில் அறிவுறுத்தினார். மேலும் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி மற்றும் பதிவாளர் தரப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

    இதன்படி இன்று மதுரை ஐகோர்ட்டில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் என அனைவரும் முககவசம் அணிந்து ஐகோர்ட்டுக்கு வந்தனர்.

    நீதிமன்றத்திற்குள் வரும் அனைவரும் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என்பதை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர்.

    நீதிமன்றத்திற்கு வரும் பார்வையாளர்கள், காவல்துறையினர் தனிவழி அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். வெளிநபர்கள், பார்வையாளர்கள், பொது மக்கள், காவல்துறையினர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வரும்போது அவர்கள் முழுமையான சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×