search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை எம்.கே.பி.நகரில் 9 மாத கர்ப்பிணி மின்சாரம் தாக்கி பலி
    X

    சென்னை எம்.கே.பி.நகரில் 9 மாத கர்ப்பிணி மின்சாரம் தாக்கி பலி

    • சுவிட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
    • எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆர்.கே.நகர்:

    சென்னை எம்.கே.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் சொந்தமாக டெம்போ வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி இந்துமதி(வயது25). 9 மாத கர்ப்பிணியான இவர் அப்பகுதியில் 16-வது கிழக்கு குறுக்கு தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு இவர் மோட்டார் போடுவதற்காக சென்றார். சுவிட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட இந்துமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகளை பார்க்க சென்ற இந்துமதியின் பெற்றோர் அவர் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×