என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரியகுளத்தில் மாணவரை திட்டிய தலைமை ஆசிரியர் மீது வழக்கு
BySuresh K Jangir24 July 2022 4:07 AM GMT
- அரசு உதவிபெறும் பள்ளியில் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீச்சுகருப்பனின் 11 வயது மகன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- சம்பவத்தன்று வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது அந்த மாணவனை ஜாதி பெயரைசொல்லி தலைமைஆசிரியர் திட்டியதாக புகார் எழுந்தது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் வைகை அணை சாலையில் புத்தர்நடுநிலைப்பள்ளி என்ற அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமைஆசிரியராக வேணுகோபால் பணியாற்றி வருகிறார். மேலும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் எடுத்து வருகிறார். இப்பள்ளியில் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீச்சுகருப்பனின் 11 வயது மகன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது அந்த மாணவனை ஜாதி பெயரைசொல்லி திட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவன் தனது தந்தையிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த வீச்சுகருப்பன் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தலைமைஆசிரியர் வேணுகோபால் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X