search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளத்தில் மாணவரை திட்டிய தலைமை ஆசிரியர் மீது வழக்கு
    X

    பெரியகுளத்தில் மாணவரை திட்டிய தலைமை ஆசிரியர் மீது வழக்கு

    • அரசு உதவிபெறும் பள்ளியில் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீச்சுகருப்பனின் 11 வயது மகன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • சம்பவத்தன்று வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது அந்த மாணவனை ஜாதி பெயரைசொல்லி தலைமைஆசிரியர் திட்டியதாக புகார் எழுந்தது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் வைகை அணை சாலையில் புத்தர்நடுநிலைப்பள்ளி என்ற அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமைஆசிரியராக வேணுகோபால் பணியாற்றி வருகிறார். மேலும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் எடுத்து வருகிறார். இப்பள்ளியில் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீச்சுகருப்பனின் 11 வயது மகன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது அந்த மாணவனை ஜாதி பெயரைசொல்லி திட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவன் தனது தந்தையிடம் கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த வீச்சுகருப்பன் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தலைமைஆசிரியர் வேணுகோபால் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×