search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
    X

    பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

    • கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சார்ந்த பிபின் மோன் பிஜி என்பரை கைது செய்தனர்.
    • கஞ்சாவை கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்று வந்ததும் தெரிந்தது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் ரெயில்நிலையத்தில் அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தனம்மாள் மற்றும் அதிகாரிகள் இன்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சார்ந்த பிபின் மோன் பிஜி (21)என்பரை கைது செய்தனர். அவர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்று வந்ததும் தெரிந்தது.

    Next Story
    ×