என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டி: வெளிமாநில முதல்-மந்திரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து
- பல்வேறு மாநில முதல்-அமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சார்பில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.
- கர்நாடக மாநில முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதல்-அமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார்.
இத்தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பல்வேறு மாநில முதல்-அமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சார்பில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.
கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயன், அருணாச்சல பிரதேச முதல்-அமைச்சர் பெமா காண்டு, சிக்கிம் மாநில முதல்-அமைச்சர் பிரேம் சிங் தமாங் ஆகியோர் இச்சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், கர்நாடக மாநில முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதல்-அமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
மத்திய பிரதேச முதல்-அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலுங்கானா மாநில முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ், அரியானா மாநில முதல-அமைச்சர் மனோகர் லால் ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் இச்சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்