search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் ஒலிம்பியாட் போட்டி: வெளிமாநில முதல்-மந்திரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து
    X

    செஸ் ஒலிம்பியாட் போட்டி: வெளிமாநில முதல்-மந்திரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

    • பல்வேறு மாநில முதல்-அமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சார்பில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.
    • கர்நாடக மாநில முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதல்-அமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார்.

    இத்தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பல்வேறு மாநில முதல்-அமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சார்பில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.

    கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயன், அருணாச்சல பிரதேச முதல்-அமைச்சர் பெமா காண்டு, சிக்கிம் மாநில முதல்-அமைச்சர் பிரேம் சிங் தமாங் ஆகியோர் இச்சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    மேலும், கர்நாடக மாநில முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதல்-அமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    மத்திய பிரதேச முதல்-அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலுங்கானா மாநில முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ், அரியானா மாநில முதல-அமைச்சர் மனோகர் லால் ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் இச்சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×