search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15-ந்தேதி அண்ணா பிறந்தநாள்: ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துகிறார்
    X

    15-ந்தேதி அண்ணா பிறந்தநாள்: ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துகிறார்

    • அண்ணாவின் உருவச் சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
    • தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் ஒரு அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

    Next Story
    ×