என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாம்பழங்கள் வரத்து 300 டன்னாக அதிகரிப்பு
- மாம்பழங்கள் வரத்து பின்னர் படிப்படியாக அதிகரித்து இன்று 300டன்னாக உயர்ந்து உள்ளது. வரத்து அதிகரிப்பால் மாம்பழங்கள் விலை கணிசமாக குறைந்து உள்ளது.
- கோயம்பேடு மார்கெட்டுக்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து பலாப்பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவிந்து வருகிறது.
போரூர்:
மாம்பழம், பலாப்பழம் சீசன் காரணமாக சென்னையில் தற்போது சாலையோரங்களில் ஏராளமான பழக்கடைகள் முளைத்து உள்ளன. மாம்பழங்களை குவித்து வைத்து விற்பனை நடக்கிறது. இதேபோல் தள்ளுவண்டிகளில் பலாப்பழம் விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. சீசன் காரணமாக கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு மாம்பழம், பலாப்பழம் வரத்து அதிகரித்து உள்ளது. வழக்கமாக திருவள்ளூர், சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் அதிகளவில் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும். கடந்த மாத தொடக்கத்தில் 100டன்னாக இருந்த மாம்பழங்கள் வரத்து பின்னர் படிப்படியாக அதிகரித்து இன்று 300டன்னாக உயர்ந்து உள்ளது. வரத்து அதிகரிப்பால் மாம்பழங்கள் விலை கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் மாம்பழம் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம்(கிலோவில்)விலை விபரம் வருமாறு:-இமாம்பசந்த்-ரூ.100, பங்கனப்பள்ளி-ரூ.50, அல்போன்சா-ரூ.90, ஜவாரி-ரூ.70, மல்கோவா-ரூ.90, செந்தூரா-ரூ.40.
இதேபோல் கோயம்பேடு மார்கெட்டுக்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து பலாப்பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ பலாப்பழம் ரூ.15முதல் ரூ.35வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பலாப்பழ மொத்த வியாபாரி அனிபா கூறியதாவது:-
இப்போது பலாப்பழம் சீசன் தொடங்கி விற்பனை களை கட்டி உள்ளது. கடந்த மாதம் வரை தினசரி 2,500 பலாப்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது தினசரி 4ஆயிரம் பலாப்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. தேக்கம் ஏதும் ஏற்படாமல் அனைத்து பழங்களும் விற்று தீர்ந்துவிடுகிறது. இன்னும் ஒரு மாதத்துக்கு பலாப்பழம் விற்பனை சூடு பிடிக்கும்.பின்னர் அதன் வரத்து படிப்படியாக குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்