search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரான்ஸ்பார்மரில் கேபிள் வயர் உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    டிரான்ஸ்பார்மரில் கேபிள் வயர் உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    • மின்சாரம் தாக்கியதில் கவுதம் கார்த்திக் இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர், தேவி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் கார்த்திக்(33). தனியார் கேபிள் நெட்வொர்க்கில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு அவர் வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நெட்வொர்க் கேபிள் வயரை செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பாரமர் மீது கேபிள் வயர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் கவுதம் கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×