என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஐஸ்அவுசில் மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது ஆண் குழந்தை பலி
- டாக்டர்கள் குழந்தை நித்திசுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
- ஐஸ் அவுஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை:
சென்னை ஐஸ்அவுஸ் பள்ளப்பன் தெருவை சேர்ந்தவர் செந்தமிழன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரட்டை ஆண்குழந்தை உள்ளது. செந்தமிழன் குடும்பத்தோடு முதல் மாடியில் வசித்து வந்தார். இரட்டை குழந்தைகளில் 4 வயது குழந்தையான நித்திஷ் நேற்று இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான்.
மாடியில் பால்கனியில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போது கைப்பிடி சுவரை பிடித்து நித்திஷ் அதில் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் அவன் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தான். பலத்த காயம் அடைந்த நித்திஷை உடனடியாக தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தை நித்திசுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நித்திஷ் பரிதாபமாக நள்ளிரவில் உயிரிழந்தான். இது தொடர்பாக ஐஸ் அவுஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாடியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தாய் மற்றும் உறவினர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை நித்திஷின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் உறவினர்களிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்படுகிறது. உடலை பெறுவதற்காக ஆஸ்பத்திரியில் உறவினர்கள் கூடி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இரட்டை குழந்தைகளில் ஒன்றை இழந்து பெற்றோர் தவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் வசிப்பவர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்