search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.பி.ஐ. வளாகத்தில் அரசு உதவிபெறும் பள்ளி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    டி.பி.ஐ. வளாகத்தில் அரசு உதவிபெறும் பள்ளி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    அரசு உதவிபெறும் பள்ளி அலுவலர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச் செயலாளர் அருள் டெல்லஸ், மாநில தலைவர் ஜான்சன், மாநில பொருளாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அரசாணை 238-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×