search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அலுவலக உதவியாளர் பேரணி-ஆர்ப்பாட்டம்
    X

    அரசு அலுவலக உதவியாளர் பேரணி-ஆர்ப்பாட்டம்

    • மாநில தலைவர் எஸ்.மதுரம், நிர்வாகிகள் முருகன், ஜம்பு, செல்வம், பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
    • வெங்கடேசன், தமிழ்செல்வி, கணேசன், ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் கோரிக்கை பேரணி-ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 10-ந்தேதி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடக்கிறது. அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமை தாங்குகிறார். மாநில தலைவர் எஸ்.மதுரம், நிர்வாகிகள் முருகன், ஜம்பு, செல்வம், பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன் பேரணியை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ரெங்கநாதன் முடித்து வைக்கிறார். வெங்கடேசன், தமிழ்செல்வி, கணேசன், ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். முடிவில் முனியப்பன் நன்றி கூறுகிறார்.

    Next Story
    ×