என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சைதாப்பேட்டையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
- தி.மு.க. சுற்றுச்சூழல் அணி இணைந்து காலநிலை மாற்றத்தை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
- கல்லூரி வளாகத்தில் நாட்டு மரக் கன்றுகளை கல்லூரி நிறுவனர் டாக்டர் தேவராஜ், சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் நட்டனர்.
சென்னை:
சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி மற்றும் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி இணைந்து காலநிலை மாற்றத்தை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் தி.மு.க. சுற்றுச் சூழல் அணியின் மாநில செயலாளரும், புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாபதி கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்.
மேலும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் விரிவுரையாளர் ரா.கார்த்திகேயன், காலநிலை மாற்றத்தில் மாணவர்களின் பங்கு குறித்து என்னவென்று பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியின் செயலர் டாக்டர் தேவ் ஆனந்த் மற்றும் சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலாளர் பழ.செல்வகுமார், 10-வது மண்டல குழு தலைவர் கவுன்சிலர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் ராமாபுரம் ராஜேஷ், ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னதாக கல்லூரி வளாகத்தில் நாட்டு மரக் கன்றுகளை கல்லூரி நிறுவனர் டாக்டர் தேவராஜ், சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் நட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்