search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளசரவாக்கத்தில் ரூ.20 லட்சம் மோசடி செய்த பெண் கவுன்சிலர் மீது மீண்டும் புகார்
    X

    வளசரவாக்கத்தில் ரூ.20 லட்சம் மோசடி செய்த பெண் கவுன்சிலர் மீது மீண்டும் புகார்

    • 3 மாத காலத்திற்குள் வட்டியுடன் தனசேகரனுக்கு பணத்தை திருப்பி தருவதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.
    • 5 மாதங்கள் ஆகியும் இதுவரை அவர்கள் சொன்னபடி பணத்தை திருப்பி தரவில்லை.

    போரூர்:

    சென்னை வளசரவாக்கம், திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் தனசேகரன் (வயது69) கூலி தொழிலாளி. இவருக்கு பூர்வீக சொத்து ஒன்றின் பாகப்பிரிவினை மூலம் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.20 லட்சம் பணம் கிடைத்தது. இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த தனசேகரனின் உறவுக்காரப் பெண் பாரதி மற்றும் அவரது தோழி வனிதா இருவரும் "மாதந்தோறும் 3 சதவீதம் வட்டி தருகிறோம்" என்று ஆசை வார்த்தை கூறி தனசேகரனிடம் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை பெற்று சென்றனர்.

    ஆனால் வட்டியும் தராமல் வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் பாரதி மற்றும் வனிதா இருவரும் தொடர்ந்து காலம் தாழ்த்தி தனசேகரனை ஏமாற்றி வந்தனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாரதி மற்றும் அவரது தோழி வனிதா இருவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் தனசேகரன் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக பாரதி மற்றும் வனிதா இருவரிடமும் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 மாத காலத்திற்குள் வட்டியுடன் தனசேகரனுக்கு பணத்தை திருப்பி தருவதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இதுவரை அவர்கள் சொன்னபடி பணத்தை திருப்பி தரவில்லை. இதையடுத்து தனசேகரன் மீண்டும் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பண மோசடியில் ஈடுபட்ட பெண் பாரதி வளசரவாக்கம் மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட 152வது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×